தூத்துக்குடி, பிப். 5- ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணிகள் ஞாயி றன்று (பிப். 5) தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூ ரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சி யகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதி ச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 இடங்களை தேர்வு செய்து அக ழாய்வு பணிகள் நடைபெற்றது. அக ழாய்வு பணியை தூத்துக்குடி மக்கள வை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
இதில் 100க்கும் மேற்பட்ட முது மக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர் கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராள மான பொருட்கள் கிடைத்தன. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதி யில் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து ஆதிச்ச நல்லூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கு அனுமதி பெற உள்ளதாகவும் அனு மதி கிடைத்த பின்னர் வாழ்விடப் பகுதி களை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் தொடங்கும் என்றும் ஆய்வாள ர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்காக கடந்த வருட இறுதி யில் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதி மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் தூத்துக் குடி மாவட்டம் அகரம், கொங்கராய குறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய ஐந்து இடங்க ளில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரி வித்திருந்தனர்.
மாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் ஞாயிறன்று அக ழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் ஏரல், வட்டாட்சியர் கண்ணன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று ஆய்வா ளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் கூறுகையில், ஆதிச்ச நல்லூரில் இதுவரை நடைபெற்ற அக ழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு அருங்காட்சி யகம் அமைப்பதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. 3000 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மனி தர்களை முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைத்த இடுகாடாக ஆதிச்ச நல்லூர் உள்ளது. ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அக ழாய்வில் முதுமக்கள் தாழிகள், தங்கத் தில் ஆன நெற்றிப் பட்டம், வால், ஈட்டி போன்ற போர் கருவிகள் கண்டெடுக்கப் பட்டன. இதைப்போல் ஆதிச்சநல்லூ ரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ் விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அடுத்த கட்ட அகழாய்வு பணிகள் திருக்கோளூரில் ஞாயிறன்று தொடங் கப்பட்டுள்ளது. தற்போது தொடங் கப்பட்ட அகழாய்வு பணி ஓர் ஆண்டு கள் நடைபெறும். இதில் திருக்கோளூர், ஆதிச்சநல்லூர், கொங்கராய்குறிச்சி, அகரம், கால்வாய், கருங்குளம் ஆகிய ஆறு இடங்களில் வாழ்விடப் பகுதி களை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது என்று தெரி வித்தார்.