“அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல”:
அமைச்சர் பதிலடி சென்னை: ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப் படுவார்கள் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக வலைதள பதிவில், “ஆங்கில மொழி இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ மொழியாக பார்க்காமல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தின் முன்னேற் றத்திற்காக கற்பிக்கின்றன” என தெரிவித்துள்ளார். “அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை உயர்குடி மொழியாக சித்தரிக்க விரும்புகிறார்கள். அது நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக அது ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எழுச்சி பெற அதிகாரம் அளிப்பதால்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். “தமிழ் அடையாளத்திற்காகவும், ஆங்கிலம் வாய்ப்பிற் காகவும் என்ற கொள்கையை தமிழ்நாடு பின்பற்றுகிறது. அமித் ஷாவின் பயம் ஆங்கிலம் பற்றியது அல்ல - அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது” என அமைச்சர் தெரி வித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: பொன்முடி நேரில் ஆஜராக விலக்கு
சென்னை: 2006-2011 வரையிலான திமுக ஆட்சி யில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்திய தாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னர் செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடு களில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட் டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப் பட்டது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி பொன்முடி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிர காஷ் விசாரித்தார். பொன்முடி சார்பில் திருக்கோவிலூர் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ-வாகவும் திமுகவின் செயற்குழு உறுப்பினராகவும் இருப்பதால் சட்டமன்றத் தேர்தல் தொ டர்பான பணிகள் தனக்கு வழங்கப்பட்டிருப்பதையும் தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜரா வதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பொன்முடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து சனிக்கிழமை உத்தரவிட்டார். மேலும் குற்றச்சாட்டுப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.
கீழடி அகழாய்வு தலத்திற்கு கல்விச் சுற்றுலா திட்டம்
சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் நடைபெற்ற ‘கலைச் சிற்பி மாநில அளவிலான பயிலரங்கம்’ நிகழ்ச்சி யில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சர், “நமது மாநிலத்தின் அகழாய்வு தலங்களை இளம் மாண வர்கள் நேரில் பார்ப்பதற்கும், நமது பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தொல்லியல் தலங்க ளுக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டத்தை விரைவில் முன்னெடுக்க உள்ளோம்” என தெரிவித்தார். கலைச் சிற்பி திட்டத்தில் முன்பு 34 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில், தற்போது 60 லட்சம் பேர் பங்கேற் றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் பரதம், நாடகம், ஓவியம், இசை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு
வால்பாறை, ஜூன் 21 - வால்பாறையில் தாயின் கண் முன்னே சிறுத்தை ஒன்று சிறுமியை கவ்விச்சென்ற நிலையில், வனத்துறையினரின் நீண்ட தேடலுக்குப் பிறகு சிறுமியை சடலமாக கண்டெ டுத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே பச்சை மலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷினி (7) என்கிற சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை கண் இமைக்கும் நேரத்தில் தூக்கிச் சென்றது. தாய் கண் முன்னே சிறுமியை கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வனத்துறையி னர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை தேடும் பணியை மேற்கொண்டனர். மோப்ப நாய்கள், ட்ரோன் கேமரா உதவியுடன் சிறுமியின் உடலை தேடும் பணியில் காவல்துறை மற்றும் வனத்துறை யினர் ஈடுபட்டனர். ட்ரோன் கேமரா மூலம் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்த நிலையில், சனிக்கிழமை மதியம் சிறுமி யின் உடல் பல துண்டுகளாக சிதறிக் கிடந்ததை வனத்துறை யினர் சேகரித்து, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இறந்த சிறுமியின் குடும்பத் திற்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை குடும்பத் தலைவி அல்லாதவர்களுக்கும் வழங்கப்படுமா?
சென்னை: தமிழ கத்தில் செயல்படுத்தப் படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடு பட்டவர்கள் ஜூலை 15 ஆம் தேதி முதல் விண்ணப் பிக்கலாம் என்று அறி விக்கப்பட்டிருக்கும் நிலை யில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் என்று தகவல்கள் கூறு கின்றன. தஞ்சையில் நடை பெற்ற நிகழ்ச்சியின்போது பேசிய தமிழக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளி லேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழு வதும் ‘உங்களுடன் ஸ்டா லின்’ முகாம்கள் நடத்தப் படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடு பட்ட தகுதியுள்ள பெண் கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங் களை நிச்சயமாக தர லாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களுக்குள் முடி வெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம் கள் நடக்கும்” என்று அறி வித்திருந்தார். அதாவது, ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக் காத, ஆனால் தகுதியுள்ள பெண்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்த ப்பட்டுள்ளது. இந்நிலை யில், ஒரு குடும்பத்தின் தலைவி மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளை இருக்கும் என்றால், அவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக் கலாம். விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்க ளும், தனியாக ரேசன் அட்டை வைத்திருந்தால், இந்த திட்டத்துக்கு விண் ணப்பிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
உழைத்தது யார்?
சென்னை: வேல் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக செல்வோரின் சப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஓடா மல் நின்ற திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி என்றும், மகளிர் உரிமை தொகை திட்டத்தால் அதிகம் பயனடைபவர்கள் இந்துக்களே என்றும் இந்துக்களுக்காக உழைத் தது யார்? என்றும் திமுக எம்.பி., கனிமொழி அர சின் திட்டங்களை பட்டிய லிட்டிருக்கிறார்.