மே 20 பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய ஏப்.25 இல் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆயத்த மாநாடு
திருப்பூர், ஏப். 16 – ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக ளுக்கு எதிராக மே 20ஆம் தேதி நாடு தழு விய வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திருப் பூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்து வதற்கு ஏப்ரல் 25ஆம் தேதி ஆயத்த மாநாடு நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங் கள் தீர்மானித்துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பி. என்.ரோடு ஏஐடியுசி அலுவலகத்தில் புதன் னன்று நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.சம்பத், துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், எல்பிஎப் மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி, ஐஎன் டியுசி மாவட்டத் தலைவர் வி.ஆர். ஈஸ்வரன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.முத்து சாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் சக்தி வேல், ஏஐசிசிடியூ மாநிலச் செயலாளர் முத்து கிருஷ்ணன், யுடியுசி மாவட்டச் செயலாளர் சதீஷ் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்திய ஒன்றியத்தில் மூன்றாவது முறை யாக ஆட்சி பொறுப்பேற்ற மோடி அரசு, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ் வாதாரத்தின் மீது கொடுரத் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. வறுமை, வேலை யில்லா திண்டாட்டம், ஊதியம் குறைப்பு, வேலை நேரம் அதிகரிப்பு என உழைக்கும் மக் களின் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படு கிறது. அமைப்புசாரா தொழிலாளர்களின் ஊதி யம் 2017-2018 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2023-2024 இல் குறைத்துள்ளது. போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப் புக்களாக திருத்தம் செய்து ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் நவீன கொத்தடி மைகளாக மாற்ற முயற்சிக்கிறது. தொழிலா ளர் சட்டத் திருத்தம் திரும்பப்பெற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனி யாருக்கு விற்கக் கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மே 20ஆம் தேதி மத்தியத் தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்த அறைகூவல் விடுத் துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் முழுமையாக வேலை நிறுத்தம் நடைபெற 50 மையங்க ளில் சுவர் விளம்பரம் செய்வது, ஏப்ரல் 25-இல் வேலைநிறுத்த தயாரிப்பு மாநாடு நடத்துவது, மே 3ஆம் தேதி அனைத்து முதலாளி சங்கங்க ளுக்கும் வேலைநிறுத்தம் குறித்து நோட்டீஸ் கொடுப்பது, மாவட்டம் முழுவதும் தயாரிப்பு கூட்டங்கள் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டுள்ளது.