திருச்சிராப்பள்ளி, மே 6- திருச்சியில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் மாநில ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தொமுச பொருளாளர் நடராஜன், சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன். எச்எம்எஸ் மாநிலத் தலைவர் சுப்பிர மணியன், ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், ஐஎன்டியுசி மாநிலச் செயலா ளர் கல்யாணகுமார், ஏஐசிசிடியு மாநிலச் செயற் குழு உறுப்பினர் ராஜன், ஏஐயுடியுசி மாநிலச் செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, எம்எல்எப் மாநிலச் செயலாளர் வெங்கடேசன், மாநில துணைச் செயலாளர் தெய்வீகன், டபுள்யுபிடியுசி சக்திவேல், எல்டியுசி மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் தொமுச பொதுச் செயலாளர் கு.சண்முகம் எம்.பி., சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், எச்எம்எஸ் அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐஎன்டி யுசி முதன்மை பொதுச் செயலாளர் சேவியர், ஏஐசி சிடியு மாநில பொதுச் செயலாளர் ஞானதேசிகன், ஏஐயுடியுசி மாநில துணைச் செயலாளர் மோகன், எம்எல்எப் தலைவர் அந்திரிதாஸ், மாநில பேரவை அமைப்பாளர் பேரறிவாளன், டபுள்யூபிடியுசி துணைத் தலைவர் சம்பத், எல்டியுசி மாநில துணைத்தலைவர் சண்முகவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இக்கூட்டத்தில், தொழிற்சாலை சட்டத் திருத் தத்தை திரும்பப்பெற்ற தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அஞ்சல் துறையில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த இரண்டு தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை போராடிய விவசாயிகளுக்கு நிதி கொடுத்தது குற்றம் எனக் கூறி ரத்து செய்த ஒன்றிய அரசை கண்டித்தும், 75 சதவீதம் அஞ்சல் துறை ஊழி யர்களை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய இரண்டு தொழிற்சங்கங்களுக்கும் உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக எச்எம்எஸ் மாநில அமைப்பு செய லாளர் ஜான்சன் வரவேற்றார். எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜோசப் நெல்சன் நன்றி கூறினார்.