tamilnadu

img

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தக் கோரி ஜூலை 11ல் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

சென்னை, ஜூலை 2- மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு  தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலி யுறுத்தி ஜூலை 11 அன்று சென்னையிலும், மாநி லம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த ஒருமைப்பாட்டுக் கழகம் அறைகூவல் விடுத்துள்ளது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சார்பில் ‘ஒன்றிய - மாநில உறவுகள்’ எனும் தலைப்பில் சனிக்கிழமையன்று  (ஜூலை 1) சென்னையில் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழ்நாடு  திட்டக்குழு முன்னாள் தலைவர் மு.நாகநாதன், ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தலைவர் பேரா. வி.பி.ஆத்ரேயா ஆகியோர் கருத்துரை யாற்றினர். அரசமைப்பு சட்டத்தின் விதிகளை மாற்றா மல், நிர்வாக உத்தரவுகள் மூலம் மாநில உரிமை கள் பறிக்கப்படுகிறது. மொழி, தேசிய இனத்  தின் அடிப்படையில் அமைந்த மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவது கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரானது. நிதி, வரி, அரசு அதிகா ரத்தை மாநிலங்களுக்கு பிரித்து தரும் வரை யில் அரசியலமைப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்ச னைகளில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வரக்கூடாது. இந்திய ஒன்றிய அரசு வலுவாக இருக்க வேண்டுமென்றால், மாநில அரசுகள் அனைத்து அதிகாரங்களையும் பெற்று வலுவாக செயல்  பட வேண்டும். பன்முகத்தன்மை பாதுகாக்கப்  பட வேண்டும். ஆனால், பாஜக ஆட்சியில் ஜன நாயகத்தின் அனைத்துக் கூறுகளும் முடக்கப் பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி உரு வாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளது என்று கருத்தாளர்கள் தெரிவித்தனர். மணிப்பூரில் அமைதி திரும்பிட தேவை யான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும், தமிழ்நாடு மாநில உரிமை களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியல் சட்டத்திற்கு எதி ராக, மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய மோடி அரசு செயல்படுவதை கைவிட வேண்டும்; கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து  செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டது.

இயக்கங்கள்

ஆக. 6- 9 தேதிகளில் `ஹிரோஷிமா நாகசாகி  தினத்தை முன்னிட்டு, அணு ஆயுதங்கள், போருக்கு எதிரான இயக்கங்களை நடத்த வேண்டும். ஆக.15 முதல் அக்.2 வரை அரசி யல் அமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட நடை பயணம், கருத்தரங்கம் உள்ளிட்ட இயக்கங் களை நடத்திட வேண்டும். உலக சமாதான தினத்தை (செப்.21) முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த ஒருமைப்பாட்டுக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த கருத்தரங்கிற்கு கழகத்தின் மாநில  தலைவர்கள் க.முத்தியாலு கே.சி.கோபிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாநிலத் தலைவர் ஜி.முரளி, துணைத்தலை வர் வ. பிரமிளா ஆகியோர் வரவேற்றனர். மாநில  பொதுச் செயலாளர்கள் ஏ.ஆறுமுக நயினார், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் உள்ளிட்டோர் பேசினர். துணைச் செயலாளர் பா.செந்தில் குமார் நன்றி கூறினார்.