அகில இந்தியத் தலைவர்கள் பிரகாஷ் காரத் - பினராயி விஜயன் பங்கேற்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மது ரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடை பெறவுள்ளது. பிரகாஷ் காரத், பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், வரவேற்புக்குழுத் தலைவருமான கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அகில இந்திய மாநாட்டிற்கான இணையதள துவக்கம், இசை - ஒளிப்படம் வெளியீடு மற்றும் குறும்பட போட்டி அறிவிப்பு நிகழ்ச்சி மார்ச் 3 திங்களன்று மதுரையில் நடை பெற்றது. அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநாட்டு நிகழ்வுகளை விளக்கி கே. பால கிருஷ்ணன் கூறியதாவது: மதுரையில் நடைபெறும் 3-ஆவது அகில இந்திய மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு மதுரை யில் ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 23 அகில இந்திய மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது நடப்பது, 24-ஆவது அகில இந்திய மாநாடு. மதுரையில் நடைபெறும் மூன்றாவது அகில இந்திய மாநாடு இதுவாகும்.
இதற்கு முன்பு 1953, 1972-ஆம் ஆண்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை நடத்திய பெருமை மதுரைக்கு உண்டு. ஏற்கனவே நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளை மாநாடுகள், நகர, ஒன்றிய, மாவட்ட - மாநில மாநாடு களை நடத்தி, அதன் நிறைவாக அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் இருந்து 750க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள மாநில முதலமைச்சர் பின ராயி விஜயன், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச - தேசிய அரசியல் நிலைமை குறித்து விவாதம் இந்த மாநாட்டில், சர்வதேச அர சியல் நிலைமைகள் துவங்கி தேசிய நிலைமைகள் வரை விவாதிக்க உள் ளோம். அதேபோல் வரக்கூடிய காலத்தில் இடதுசாரி சக்திகளை பலப் படுத்துவது குறித்தும், இந்த நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான நவீன பாசிச பாணி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி யை எதிர்த்தும், மோடி அரசை வீழ்த்து வது, மதச்சார்பற்ற கோட்பாட்டின் அடிப்படையில் மக்களை ஒன்று திரட்டு வது குறித்து விவாதித்து, வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன. நாட்டில் ஒரு கொடுங்கோன்மை ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ள பாஜக, நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதிலும் மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. மத்திய தர மற்றும் சாமானிய மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கத் தவறிவிட்டது. தங்களின் இந்த தோல்விகளை மூடி மறைப்பதற்காக,
இணையதளம் துவக்கம், பிரச்சார பாடல் வெளியீடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டையொட்டி, பிரத்யேக இணைய தளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிரச்சார பாடல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வெளியீட்டு நிகழ்ச்சி, மதுரை டவுன்ஹால் ரோடு காலேஜ் ஹவுஸ் அருகில் ஹோட்டல் சபரீஸ் பார்க்கில் திங்களன்று காலை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அகில இந்திய மாநாட்டின் இணையதளத்தை துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், வரவேற்புக்குழு செயலாளருமான சு. வெங்கடேசன் எம்.பி., ‘தமிழ் கம்யூனிஸ்ட்’ என்ற பெயரிலான பாடல்களை வெளியிட்டார். மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே. சாமுவேல்ராஜ், க. சுவாமிநாதன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, துணை மேயர் தி. நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாநாட்டையொட்டிய குறும்பட போட்டியும் அறிவிக்கப்பட்டது.
குறும்பட போட்டி அறிவிப்பு
ம்பட போட்டி அறிவிப்பு சிபிஎம் அகில இந்திய 24வது மாநாட்டையொட்டி,
1. அன்பின் அலைகள் (Waves of Love)
2. கண்ணாடியின் இருபக்கங்கள் (Two Sides of the Mirror)
3. வெல்வதற்கு ஒரு உலகம் (A World to Win) ஆகிய தலைப்புகளில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டது. வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை கருப்பொருளாகக் கொண்ட இந்த குறும்படங்கள் 5-10 நிமிடங்கள் (படம் எந்த மொழியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப்டைட்டில் உடன் சமர்ப்பிப்பது தேர்வுக்குழுவுக்கு உதவியாக இருக்கும்) கொண்டதாக இருக்க வேண்டும். திரைப்படத் துறையின் புகழ்பெற்ற முன்னோடிகளால் சிறந்த 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களின் படைப்புகள் 24வது தேசிய மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் தங்கள் குறும்படத்தை cpim24allindiacongress@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கடைசி நாள் மார்ச் 31, 2025.