tamilnadu

img

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை, ஜூலை 4- ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதி முக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.  கடந்த ஜூன் 23 ஆம் தேதி சென்னை வான கரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்  தில், அதிமுக தலைமை தொடர்பான புதிய  முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு  கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்திருந் தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்  பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்  றும் சுந்தர்மோகன் அமர்வு, “ஒருங்கிணைப்பா ளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுக் குழு வில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவை யும் எடுக்கலாம். மற்ற விவகாரங்களை ஆலோ சிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது” என  உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மா னங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதப்பட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகி யோரை தண்டிக்க வேண்டும் எனக் கோரி, சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

மேலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்  குழு கூட்டம் குறித்த அறிவிப்பும் செல்லாது. எனவே ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் திங்களன்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஜூலை 11 ஆம் தேதி  பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்த மனுவில் கோரிக்கை எழுப்ப முடி யாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள்  தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என பிறப்பித்த இடைக்கால உத்தரவு, ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டும்  பொருந்தும். அதன்பின்னர் நடக்கும் பொதுக் குழுக்களுக்கு அல்ல” என்று விளக்கம் அளித்த னர். உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, விசாரணைக்கு எடுக்கப்பட்டுவிட் டாலோ, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப் பட்டாலோ இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜூலை 11 பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் நீதி மன்றம் தலையிட முடியாது. ஜூன் 23 ஆம்  தேதி நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தர விட்டு, விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.