பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
ஈரோடு,பிப்.21- ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், தேமுதிக வேட் பாளரை ஆதரித்து மகளிர் அணித்தலைவர் பிரேம லதா விஜயகாந்த் இரண்டு நாள் பிரச்சாரத்தில் ஈடு பட்டார். அப்போது, அதிமுக வேட்பாளரின் தகுதிகுறித்து, கடுமையான குற்றச் சாட்டை முன்வைத்தார். இதில், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து, ஈரோடு கிழக்கில் இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்ற அதிமுக தென்னரசு, இப்போது இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், எம்எல்ஏவாக இருந்தபோது, இவர், தலைமை வகித்த சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்விற்கு கூட வாய் திறக்காதவர். இதேபோன்று, இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என பெண்கள், பொது மக்கள் போராடிய போதும், அக்கடையில் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் வாங்கிக்கொண்டு கடையை நடத்த அனுமதித்தார் என்று பொதுமக்களே குற்றம்சாட்டு கின்றனர். அத்தகையவர்தான், அதிமுகவின் வேட்பா ளராக போட்டியிடுகிறார். இதேபோல, இவர் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனி சாமி, நல்லவர் வருகிறார் வழிவிடுங்கள் என்று யாரா வது சொல்கிறார்களா என்றால் இல்லை. அவர் பிரச்சா ரத்தில் என்ன செய்யப்போகிறோம் என சொல்லி வாக்கு கேட்காமல் தாத்தா ஆனவர்களை ஆம்பிளையா என கேட்டு பிரச்சாரம் செய்கிறார்.