tamilnadu

img

மதுரையில் 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம்!

மதுரை ஆக 7- 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர்.

மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றியக் பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட கோரியும், சட்டக்கூலி ரூ.319 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.மாயாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா பேசினார். விவசாய தொழிலாளர்கள் 100க்கு மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.