மதுரை:
நவம்பர் மூன்றாவது வாரத்தில் விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள்,புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகியோரைத் திரட்டிபுதுதில்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான ஏ.விஜயராகவன் கூறினார்.
மதுரையில் நடைபெற்ற சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு விவசாயத் தொழிலாளர்களை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது. கொரோனா காலத்தில் பட்டினிச் சாவுகள் அதிகரித்துள்ளன. மோடி அரசு இவர்களின் மீது அக்கறையோ, கருணையோ காட்டவில்லை.கொரோனா காலத்தில்புலம் பெயர் தொழிலாளர் களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு ரூ.20ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. இது போதுமானது அல்ல! தமிழகத்தில் 100 நாள் வேலைக்கு நாளென்றுக்கு ரூ.600 கூலி வழங்க வேண்டும். ஆனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.150முதல் ரூ.300 வரை மட்டுமே கூலி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இன்றைக்கும் உள்ளது. ஆனால் கேரளத்தில் 100நாள் வேலையில்ஈடுபட்டுள்ள தொழிலாளர் களுக்கு நாளென்றுக்கு ரூ.650 கூலியாக வழங்கபடு கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
பாஜக ஆட்சியில் தலித்,புலம்பெயர் தொழிலாளர் கள், சிறுபான்மை மக்களின் சமூகப் பாதுகாப்பும், வாழ்க்கை பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியக் காரணியாக இருக்கும் ரேசன் விநியோகத்தைப் பலப்படுத்த வேண்டும். விவசாயத் துறையைப் பொறுத்த மட்டில் கொள்முதலும், விநியோகமும் ஒன்றுகொன்று தொடர்புடையவை. இன்றைக்கு அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு கொள்முதல் கார்ப்பரேட்களின் கைக்கு சென்று கொண்டிருக்கிறது. இது நாட்டின் நலனை கடுமையாக பாதிக்கும்.புதிய வேளாண் சட்டங்கள் நிலைக்குழுவின் ஒப்புதலைப் பெறாமல், எதிர்க்கட்சி களின் ஆலோசனைகளைக் கேட்காமல் நிறைவேற்றப் பட்டுள்ளன.தமிழகத்தில் பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும். பேரூராட்சிப் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டாலும் அவை இன்றைக்கும் கிராமம் சார்ந்த பகுதிகளாகவே உள்ளன. அங்கும் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். எனவே பேரூராட்சிப் பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது அவசியமாகிறது. இதைமத்திய-மாநில அரசுகள்உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.பாஜக ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங் கள் அதிகரித்திருப்பது, வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது.
கொரோனா காலத்தில் விவசாயத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை பாஜக அரசு தனியார்மயமாக்குவது கண்டனத்திற்குரியது. கேரளாவைப் பொறுத்தமட்டில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையானஅனைத்து முயற்சிகளை யும், எடுத்து வருகிறது. குறிப்பாக ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை கேரளா அரசு வழங்கிவருகிறது. இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன் உதாரணமாகும். நவம்பர் மூன்றாவது வாரத்தில் விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள்,புலம் பெயர் தொழிலாளர் களைத் திரட்டி மாபெரும் போரட்டத்தை புது தில்லியில்நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.இவ்வாறு ஏ.விஜய ராகவன் கூறினார்.பேட்டியின் போது சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஏ.லாசர், உடனிருந்தார்.