tamilnadu

போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம்

போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 10- சென்னை போரூரில் ரூ.258 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறினர். சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம் பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரி களில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படு கிறது. இதனை தொடர்ந்து, கோவளம் அருகில் ரூ.471 கோடியில் சென்னை யின் 6-வது நீர்த்தேக்கம் அமைப்ப தற்கான பணிகளிலும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னை அடுத்த போரூரில் ரூ.258 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. 11 ஆயிரத்து 486 சதுர மீட்டர் பரப்பளவில் 15 மில்லியன் லிட்டர் கொள்ளளவு சேமிப்பு திறன் கொண்ட வகையில் இந்த நீர்த்தேக்கம் இருக்கும். சென் னை, மணலி, மாதவரம் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். இந்த நீர்த்தேக்கத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் நிதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.51.99 கோடி நிதி அளிக்கிறது. 18 மாதங்களில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் தாம்பரம் மாந கராட்சியின் கீழ் உள்ள 20 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வசிப்ப வர்களுக்கு குடிநீர் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதல் படியைக் குறிக்கும் வகையில் முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. பம்பிங் நிலையங்கள் மற்றும் குளோரின் கட்டு மானங்கள், எந்திரம் மற்றும் ஏற்கெனவே உள்ள நீர் விநியோக குழாய் இணைப்புகள் போன்ற பல முக்கிய கட்டங்களை இந்த திட்டம் உள்ளடக்கியது.