நாமக்கல், ஜூலை 15- நாமக்கல் மாவட்டத்தில் சேர்க்கப் பட்ட 259 தீக்கதிர் சந்தாவிற்கான தொகை ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 500ஐ, தீக் கதிர் முதன்மை பொது மேலாளர் என். பாண்டியிடம், மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் ஒப்படைத்தனர். உழைக்கும் மக்களின் உண்மை யின் பேரொளியான தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நாமக்கல் மாவட் டத்தில் ஜூலை 1 முதல் 10 வரை தீவிரமாக நடைபெற்றது. இந்த சந்தா சேர்ப்பு நிகழ்வில் கிளை மட்டம் முதல் மாவட்ட அளவில் உள்ள அனைத்து தலைவர் களும் உற்சாகமாக ஈடுபட்டனர். மாவட் டம் முழுவதும் மொத்தமாக சேர்க்கப் பட்ட சந்தா தொகையை வழங்கும் நிகழ்வு பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் தீக்கதிர் ஆண்டு சந்தா 141, ஆறு மாத சந்தா 94, தினசரி சந்தா 24 என மொத்தம் 259 சந்தாவிற்கான தொகை ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 500 தொகை யினை தீக்கதிர் முதன்மை பொது மேலா ளர் என்.பாண்டியிடம், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வழங்கி னர். அப்போது, சில தோழர்கள் தங்கள் வீட்டில் உண்டியலில் சேகரித்து வைத்த காசுகளை, தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகையாக செலுத்தியது உணர்வு பூர்வமாக இருந்தது. இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி. பெருமாள், எம்.அசோகன், கே.தங்க மணி, எஸ்.தமிழ்மணி, எஸ்.சுரேஷ், இடைக்கமிட்டி செயலாளர்கள் என். சக்திவேல், கே.சண்முகம், கோ.செல்வ ராசு, கே.சின்னசாமி, கே.எஸ்.வெங்க டாஜலம், ஆர்.மனோகரன், ஐ.ராயப் பன், ஆர்.ரவி, ஆர்.சந்திரமதி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, கே.மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.