tamilnadu

மூட நம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் பள்ளிகளில் இருக்கக் கூடாது!

புதுக்கோட்டை, செப்.8 - மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்பாடுகள் பள்ளிகளில் இருக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கூறினார். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழ மையன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு : அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகாவிஷ்ணுவின் கைது ஏற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய விவகாரத்தில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பள்ளிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக் கூடாது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2 அன்று விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பில் மாநாடு நடத்த உள்ளோம். மாரி செல்வராஜ், வெற்றி மாறன், பா.ரஞ்சித் போன்றவர்கள் சாதிப்  பெருமை பேசக்கூடிய படங்களை எடுப்ப தில்லை. சாதிய கட்டமைப்பை விவாதத்து க்கு உள்ளாக்கக் கூடிய கருப்பொருளை மையமாக வைத்துத்தான் அவர்கள் படங்களை எடுத்து வருகின்றனர். அதுதான் இப்போது சாதியவாதிகளுக்கு பிரச்சனையாக உள்ளது. அவர்கள் சாதி யவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் அல்ல. சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற கருத்தைத்தான் திரைப்படங்களின் வாயிலாக அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். தமிழகத்தில் சாதியப் பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியேதான் உள்ளது. ஒரு சதவீதம்தான் நாம் பேசத் தொடங்கி உள்ளோம். இந்திய அளவில் இந்த விவாதத்தை விரிவாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.