tamilnadu

பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள்: உயர்நீதிமன்றம் அதிருப்தி

மதுரை:
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பள்ளிக் கல்வித் துறை அதிகாரிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமன செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவுபிறப்பித்ததை  எதிர்த்து 500 நாட்களுக்குப்பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு  செய்ய அனுமதிகோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளியன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது 2018-ஆம்ஆண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை/ இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது/ அவமதிப்பு வழக்கும் இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.பள்ளிக் கல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஐம்பதுசதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது.அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகளில் மட்டுமே  துரிதப் படுத்தப்படுகிறது. இந்த அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித் துறையின் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோரை நீதிமன்றம் எதிர் மனுதாரராக சேர்த்துக் கொள்கிறது..தமிழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்காக தமிழக அரசு ஆண்டுக்கு  444 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கிவருகிறது.. ஆனால் அவர்களின் பணி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப் படுத்துவதில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு அபராதம்விதிக்க வேண்டும். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகின்றது/ இந்த அபராத தொகை அவரது ஊதியத்தில் அரசு பிடித்தம் செய்ய வேண்டும்.தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மேல்முறையீடு செய்வதில் தொடர்ந்து அரசு அதிகாரிகள்மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர். கல்வித் துறை அதிகாரிகளுக்கு முறையான சட்ட ஆலோசனை கிடைக்கப் பெறாததால் இதுபோன்று நடைபெறுகின்றது.  அவர்களுக்கு முறையான சட்ட ஆலோசகர்களை ஏன் தமிழக அரசு நியமனம் செய்யக்கூடாது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.