tamilnadu

img

புதுச்சேரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்

புதுச்சேரி, ஜூலை 16-  புதுச்சேரி காவல்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 252 காவலர் களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் ஞாயிறன்று  நடைபெற்றது.  உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்க சாமி கலந்துகொண்டு புதி தாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணை வழங்கி பேசுகை யில் , படித்த இளைஞர் களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத் தோடு, எல்லா துறை களிலும் பணி இடங்களை புதுச்சேரி அரசு நிரப்பி வரு கிறது. முதலில் காவல்துறை யில்தான் இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள் ளனர். மேலும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 500 பேருக்கு பணி கொடுக்க உள்ளோம். இதில் எந்த அரசியல் தலையீடும் கிடை யாது. அடுத்ததாக உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப் பப்பட உள்ளது. அதேபோல் காலியாக உள்ள இளநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர் உள்ளிட்ட 456 பணியிடங்களுக்கு விரை வில் தேர்வு நடைபெற வுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வும் நடவடிக்கை எடுத்து வரு கிறோம். புதுச்சேரிக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வரு கிறார்கள். சுற்றுலா பயணி களுக்கும் நாம் நண்பனாக இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் பணியையும் செய்ய வேண் டும். புதிய காவலர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள் ளது. மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டும் வகையிலும் உங்க ளது பணி இருக்க வேண்டும். காவலர்கள் நீச்சல் பயிற்சி பெற நீச்சல் குளம் கேட்டுள்ளார்கள். நீச்சல் குளம் கட்ட கோரிமேட்டில் இடம் உள்ளது. இதற்கான நிதி காவல்துறைக்கு ஒதுக்கி தரப்படும். படித்த இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்ற அடிப் படையில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங் களை நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையில் கூடுதலாக 500 ஊர்காவல் படை வீரர்கள், 60 உதவி ஆய்வாளர்கள், 200 கடலோர காவல் பாது காப்பு படையினர், 12 ரேடியோ  டெக்னீஷியன் பணியிடங் கள் அடுத்து வரும் காலங்க ளில் நிரப்பப்படும் என்றார்  முதல்வர் ரங்கசாமி.