சென்னை, ஜன. 18- முழு பொதுமுடக்கத்தின் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப் பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். முழு பொதுமுடக்கத்தின் போது பொதுமக்கள் சிலர் பொறுப் பற்ற முறையில்காவலர்களிடம் நடந்துகொணடதாகவும், சிலர் காவலர்களை தாக்கிய போதும் காவல் அதிகாரிகள், காவலர்கள் துறைக்குரிய பொறுப்புடனும், பொறுமையுடனும், மனிதாபிமானத் துடனும், சாமர்த்தியத்துடனும் பணி யாற்றியதற்காக தனது பாராட்டை தெரி வித்துள்ளார். அதேபோல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் ரோந்து சென்று பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி யது காவல்துறை மீது மக்களுக்கு நன்மதிப்பையும், நம்பிக்கையையும், ஏற்படுத்தியதாக அதில் குறிப்பிட்டு ள்ளார். முழு பொதுமுடக்கத்தின் போது விதிமுறைகளை மீறியதாக கடந்த 9ஆம் தேதி 19,962 வழக்குகளும், 16ஆம் தேதி 14,956 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 78 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரி வித்துள்ளார். குறிப்பாக முழு பொதுமுடக்கத்தின் போது வெளியூர் சென்று திரும்பு வோர் ரயில் நிலையம், பேருந்து நிலை யம் வந்த பின்பு வீடு செல்வதற்கு ஆட்டோ மற்றும் டாக்சி கிடைக்காமல் அவதியுற்றதாகவும், சில ஆட்டோ பயணத்தில் அதிகக் கட்டணம் வசூலிப் பதாக புகார்கள் வந்துள்ளது. இனி வரும் முழு பொதுமுடக்க நாட்களில் வெளியூர் சென்று திரும்பும்போது மக்களுக்கு ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஆட்டோ மற்றும் டாக்சியில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.