விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு பணமும் பெரிய வசதிகளும் மட்டுமே காரணம் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் சென்னையின் புது வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த காசிமா. ஆட்டோ ஓட்டுநரான தந்தை மெகபூப் பாஷாவின் அன்றாட வருமா னத்தில் வாழ்க்கையை நகர்த்தும் குடும்பத்தில் பிறந்த காசிமா, கேரம் விளை யாட்டில் உலக சாம்பி யன் ஆகியிருக்கிறார். கேரம் விளை யாட்டில் ஆர்வம் கொண்ட பாஷா, தனது பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள், மீன வர்களின் குழந்தை களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வந்தார். இதனால் ஈர்க்கப்பட்ட அவரது மகள் காசிமா, எட்டு வயதிலேயே தந்தையிடம் கேரம் பயிற்சி பெறத் தொடங்கினார். பாஷாவின் பயிற்சியில் பலர் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக 15 வீரர்கள் பல பதக்கங் களை வென்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காசிமா, சிறு வயதிலிருந்தே உள்ளூர் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி களைக் குவித்தார். தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி, தேசிய அளவில் விளை யாடும் வாய்ப்பைப் பெற்றார். அவரது திறமை அவரை சர்வதேச போட்டிக்கும் அழைத்துச் சென்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா வில் நடைபெற்ற ஆறாவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு காசிமா தேர்வு செய்யப் பட்டார். ஆனால் வறுமை காரண மாக அவரது பயணம் கேள்விக் குறியானது. இந்த செய்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர், காசிமாவின் அமெரிக்க பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த உதவி வீண் போகவில்லை. தங்கப் பதக்கத்திற்கான மகளிர் தனிநபர் பிரிவின் இறுதிப் போட்டி யில், இந்திய அளவில் 18 முறையும், சர்வதேச அளவில் மூன்று முறையும் வெற்றி கண்ட உலகச் சாம்பியன் ரேஷ்மாவை எதிர்கொண்டார். மூன்று சுற்றுகளிலும் தனது சாதுரியமான ஆட்டத்தால் ரேஷ்மாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஒற்றையர் பிரிவு மட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று முத்தாய்ப்பு சேர்த்தார். காசிமாவின் சாதனைக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வறுமை, பின்புலமின்மை என்ற தடை களை தாண்டி, உழைப்பாலும் முயற்சியாலும் சாதிக்க முடியும் என்பதற்கு காசிமா ஒரு உதாரணமாக திகழ்கிறார். உற்சாக வரவேற்பு தங்கப் பதக்கத் துடன் நாடு திரும்பிய தங்கமகள் காசி மாவுக்கு சென்னை விமான நிலையத் தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய காசிமா, “கேரம் விளையாட்டில் அதிக பேருக்கு ஆர்வம் இல்லை. கேரம் ஒரு நல்ல விளையாட்டு; இதில் அதிகப்படி யானோர் பங்கேற்க வேண்டும்; நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது. கேரம் உலகக் கோப்பை சாம்பியன் ஷிப் போட்டிக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சரும் விளை யாட்டு துறை அமைச்சருமான உதய நிதி ஸ்டாலினுக்கு நன்றி” என்றார்.