எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்ய தயார். ஆனால் அதை அவர்களால் முடிவு செய்ய முடிய வில்லை. அவர்களுக்கான விடுமுறை, மருத்துவம், ஊதியம், அவர்களின் தேவை களை கேட்பதற்கான ஒரு அமைப்பு அவர்க ளுக்கில்லை.அவர்கள் தங்களின் சக தொழிலாளிகளுடன் மனம் விட்டு பேச விரும்புகிறார்கள்.
தொழிலாளர்கள் மனம் விட்டுப் பேச...
ஒருவர் இருவராக, இருவர் மூன்று பேராகப் பேசினால் அவர்களது வேலை பறிக்கப்படும். அடுத்த நிமிடமே பணி செய்யும் நிறுவனத்தை விட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். சட்டத்தின் பாது காப்பு, அது குறித்த எதுவும் அவர்களுக்கு தெரியாத நிலையில் வழக்கத்துக்கு மாறாக அவர் தனது மேல் அதிகாரியிடம் அவரது உணர்வுகளை வெளிப்படுத்தினால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இந்தப் பின்னணியில் தனிமையில் நீண்ட காலம் பயணிக்க முடியாத நிலை யில் அவர்களின் உறக்கங்கள் கலைந்து விட்டன; சுமைகள் கூடி விட்டன. நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி மாதாந்திர சம தவணை (இஎம்ஐ) கடன் வலையில் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பல நூறு மைல் கடந்த அவர்களின் உறவுகள், அவர்களுடனான தொடர்புகள், மேற் கண்ட பணிச் சூழல் காரணமாக மிகப் பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. “தான் தன் குமுறலை, வலிகளை வெளிப் படுத்த திசையற்ற தொழிலாளர்களாக குமுறிக் கொண்டிருக்கும் பகுதி தான் உற்பத்தியில் சாதனைகள் குவிக்கும் எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரி.
தமிழகம் சாதித்தது... எப்படி?
இந்தியாவின் எலக்ட்ரானிக் தொழிற் துறை உற்பத்தி பிரிவில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 33 சதவீதமாக இருப்பதும் 2023- 24 ஆம் நிதியாண்டில் எலக்ட்ரா னிக் பொருட்கள் ஏற்றுமதியில் 9 பில்லி யன் டாலர் இலக்கை தாண்டி 9.56 பில்லி யன் ஆக ஏற்றுமதியில் சாதித்து ஒட்டு மொத்த இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி யான செய்தி. இந்த வளர்ச்சியின் பின்ன ணியில் முக்கியமாக இருப்பவர்கள் இளம் தொழிலாளர்கள் என்பதையும் இந்த வளர்ச்சி மேற்கண்ட சூழல்களின் பின்ன ணியில் தான் உருவாகி இருக்கிறது என்ப தையும் வளர்ச்சியின் பெருமை பற்றி பேசுகிற ஆய்வாளர்கள் வளர்ச்சியின் இன்னொரு முகத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.
60 மணி நேரம் மிகைப்பணி
உலகின் எலக்ட்ரானிக் முன்னணி நிறு வனங்களான ஃபாக்ஸ்கான் -டாடா எலக்ட்ரானிக்ஸ் -பெகட்ராம் -சால்காம் -பிளக்ஸ்ட்ரானிக்ஸ் - சாம்சங் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் மத்தியில் இந்த வளர்ச்சி. இந்த நிறுவனங்களின் எந்த ஒரு இடத்திலும் தொழிலாளர்களின் மனித உரிமைகளும் அவர்களுக்கான தொழிலா ளர் நலச் சட்ட உரிமைகளும் அவர்களின் தேவைகளை அடைவதற்குரிய வாய்ப்பு களும் அங்கீகரிக்கப்படுவதில்லை; அவை முழுக்க முழுக்க மறுக்கப்பட்ட பகுதி என்ப தனை தமிழக அரசும் நாகரிக சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம், வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம் என்கிற தொழிற்சாலை சட்டம் அமலில் உள்ள இக் காலத்தில்தான் எலக்ட்ரானிக்ஸ் நிறு வனங்கள் சட்டபடியான வேலை நேரத்தி ற்கு மாறாக மாதத்தில்60 மணி நேரம் மிகைப் பணியை செய்யுமாறு தொழிலா ளர்களை கட்டாயப்படுத்தப்படுகிறது. தொழிலாளர்கள் கடன் சுமை காரண மாக பணி பாதுகாப்பற்ற நிலையில் மேற் கண்ட உழைப்பை செலுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஒரு பகுதி தொழிலாளர்கள் 16 மணி நேரமும் வேலை செய்வதற்கு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். தொழிற்சாலைச் சட்டங்கள் இதை நேர்மையான உற்பத்தி என்று கூறவில்லை. அந்தச் சட்டத்தின் மொழியில் கூற வேண்டுமானால், இது ஒரு சட்ட விரோத உற்பத்தி.
ஆலைக்குள்ளேயே வாழ்கிறார்கள்
பெரும்பாலான தொழிலாளர்கள் தினமும் உற்பத்திக்குச் செல்வதற்காக நான்கு மணி நேரம் தயாரிப்பு மற்றும் பயணத்திற்காக ஒதுக்குகிறார்கள். தொழிற்சாலைக்கு அருகில் எந்த ஒரு குடி யிருப்பும் இல்லை என்பது இந்த நிகழ்வின் அடிப்படை காரணம். 12 மணி நேரம் நிறு வனத்தின் ஆலைக்குள்ளேயே இருக்கிறார் கள். மீதி இருக்கும் 8 மணி நேரம் அவர்கள் உறங்குவதற்காக. அப்படியானால் அவர்கள் குடும்பத்தோடு சமூகத்தோடு உறவாடுவதற்கான நேரம் எங்கே? இந்த கேள்விக்கு உலகம் விடை கண்டாக வேண்டும். இதனால் இளம் தொழிலாளர்க ளின் குடும்ப உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
உறங்கும் நேரம் எது?
ஒரு குழந்தைக்கும் தந்தைக்குமான பாசம், மனைவிக்கும் கணவனுக்குமான நேசத்துக்குரிய உறவுகள் கூட அரிதான ஒன்றாக மாறிக்கொண்டிருக்கின்றன.அதி காலையில் குடும்பம் உறங்கிக் கொண்டி ருக்கிற போதே அவர்கள் உற்பத்திக்காக வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். சூரியனைப் பார்க்காத தொழிலாளிகள் இந்த பகுதியில்தான் இருக்கிறார்கள் என்ப தனை சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வேலை முறை அவர்கள் உணவு நேரத்தைக் கூட மாற்றி விட்டது. காலை, மதியம், இரவு பசிக்கு உணவு என்கிற நிலைக்கு மாறாக பணிச் சூழ லுக்கேற்ற உணவு முறையாக இருக்கின் றது. இரவு உறங்க வேண்டும் என்கிற உல கத்தின் நடைமுறைக்கு மாறாக, வாரத்திற்கு ஒரு முறை பகல் -இரவு -நடுப் பகல் என்கிற முறையில் மூன்று விதமான உறங்கும் நேரம் மாற்றப்படுகின்றது. ரோபோக்களின் வருகை, செயற்கை நுண்ணறிவு எந்திரங்களின் வளர்ச்சி, டிஜிட்டல் மயப்போக்குகள் பன்னாட்டு நிறு வனங்களின் நவீன உற்பத்தி மையங்க ளாக திகழ்கின்றன. ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்களின் அதிவேக செயல்பாட்டிற்கு இணையாக உற்பத்தி இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அதற்கு ஈடாக இணைக்கப்படுகின்றது.
மார்கழி எழுச்சியின் முழக்கம்
இந்த கட்டாய உற்பத்தியால் இளம் தொழிலாளர்கள் நரம்பியல் மற்றும் மன ரீதியான பாதிப்புக்கும் தள்ளப்படுகிறார் கள். தன்னைச் சுற்றி சித்ரவதைகளின் அம்புகள் சூழப்பட்டிருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிற தொழிலாளிகள் மத்தி யில் தான், 2020 ஆம் ஆண்டு ஃபாக்ஸ் கான் தொழிற்சாலையில் 15 ஆயிரம் பெண் தொழிலாளிகள் தங்களின் சகிக்க முடியாத வேலைச் சூழல் காரணமாக தன்னெ ழுச்சியாக சாலைக்கு வந்து போராடி னார்கள். ‘மார்கழி எழுச்சி’ என்று வர்ணிக் கப்பட்ட அந்தப் போராட்ட அலைகளின் குரல் எதுவாக இருந்தது? எனக்கான ஒரு அமைப்பு வேண்டும். எனது விருப்பத்தை வெளிப்படுத்துவ தற்கான வாய்ப்புகள் வேண்டும். கூட்டு பேர உரிமை நான் விரும்புகிற ஒரு தொழிற்சங்கம், இந்தியாவில் அனு மதிக்கப்பட்டிருக்கிற சட்ட ரீதியான பாது காப்புகள் எனக்குரிய பலன்கள் பெறுவ தற்கு நான் விரும்புகிற தொழிற்சங்கம் வேண்டும். இதுதான் அந்த பெண் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக கூறினார்கள்.
தொழிற்சங்கத்தால் தொழிலுக்கு ஆபத்தா?
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தமிழ கத்தில் கால் பதித்து 20 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தொழிலாளர்களின் இந்த விருப்பங்களை நிறைவேற்ற அரசின் ஆதரவு போதுமான தாக இல்லை. நிறுவனங்கள் இதை முற்றிலும் அனுமதிக்க மறுக்கின்றன. இந்த பின்னணியில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இப்போது தொழிலாளர்கள் சங்க மாக அணி திரளத் தொடங்கி இருக்கி றார்கள். தொழிற்சங்க இயக்கத்தின் வளர்ச்சி என்பது தொழில் அமைதியை சீர்குலைத்துவிடும் என்கிற கோணத்தில் நிறுவனங்களும் அரசும் கருதுகின்றன. இது ஒரு தவறான புரிதல். ஜனநாயகச் சூழல் எங்கு அனுமதிக்கப்படுகிறதோ, அந்தப் பகுதியே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கான பகுதியாக இருக்க முடி யும். கடந்த 20 ஆண்டுகளில் தொழிற் சங்கத்தை அங்கீகரித்து சுமூக உறவுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஆலைகளில் உற்பத்தியும் வர்த்தகமும் தொழில் உறவு களும் அதற்கு முந்தைய காலத்தை விட மேம்பட்டு இருப்பதை பல நிறுவனங்க ளின் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
சங்கம் வளர்ந்தால் உற்பத்தியும் வளரும்
உதாரணமாக டயர் உற்பத்தியின் முக்கிய நிறுவனங்களாக இருக்கக்கூடிய அப்பல்லோ -ஜே கே டயர் -ஏசியன் பெயிண்ட்- யமஹா நிறுவனங்கள் தொழிற் சங்கத்தை துவக்கத்தில் எதிர்த்தாலும் தங்கள் அனுபவம் மூலமாக அந்த அமைப்புகளோடு உறவை சுமூகமாக ஏற்படுத்திக் கொண்டதின் மூலம் கடந்த காலங்களை விட வாகன உற்பத்தி, டயர் உற்பத்தி மற்றும் பெயிண்ட் உற்பத்தி பலமடங்கு கூடியிருப்பதும் தொழிலாளர்க ளுக்கும் நிர்வாகத்திற்குமான உறவுகள் வலுவாக இருப்பதும் கூட்டுப் பேர நடை முறைகள் மூலம் பிரச்சனைகள் தீர்வு காணப்படுவதும் முன்மாதிரி அடையா ளங்களாக இருப்பதை தொழிற்சங்கத்தை விரும்பாத பிரிவினர் பார்க்க வேண்டும். 40,000 தொழிற்சாலைகள் இருக் கக்கூடிய தமிழகத்தில் சுமார் 200 தொழிற் சாலைகளில் மட்டும்தான் தொழிற்சங்க அமைப்புகளை கடும் தடைகளுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.
தொழில் அமைதி ஏற்பட...
கணிசமான பகுதிகளில் அவை அடக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளையும் தொழிற்சங்கம் ஏற்றுக் கொள்ளப்படாத பகுதிகளையும் ஒப்பிட்டு பார்த்துஅந்நிய நிறுவனங்கள் தொழிற்சங்கம் குறித்த தங்கள் கொள்கைகளில் மாறுதல் செய்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே தொழில் அமைதியும் தொழில் உறவுகளும் உற்பத்தி வளர்ச்சியும் சமச்சீராக முன்னேறும். ஆட்சியாளர்க ளும் முதலீட்டாளர்களும் இதற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்.