tamilnadu

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி ; இருவர் காயம்....

சிவகாசி:
சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் பட்டாசுஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாய மடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளதுஎம்.துரைச்சாமிபுரம். இங்கு தனியாருக்குச் சொந்தமான ஸ்ரீகிருஷ்ணசாமி பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் உரிமம்பெற்ற ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்ற னர். திங்கள்கிழமை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பட்டாசுக்கான வேதிப் பொருட்களைக் கலக்கும் அறைக்கு ஆனையூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்(48) என்பவர் சென்றார். அப்போது, வேதிப் பொருட்களில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கரச் சத்தத்துடன் அந்த அறை வெடித்துச் சிதறியது. இதில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

அருகில் இருந்த அறைகளில் பணியாற்றிய கல்லம நாயக்கன்பட்டியைச் சேர்ந்தமுருகன்(43), துரைச்சாமி புரத்தைச் சேர்ந்த கந்தசாமி(52) ஆகியோர் படுகாய மடைந்தனர். இந்த விபத்தில்நான்கு அறைகள் இடிந்துதரைமட்டமாகின.  தீயணைப்புத்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு சிவகாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;