சென்னையில் ஏப்ரல் 19 முதல் ஏசி மின்சார ரயில் சேவை
சென்னையில் மின்சார ரயில் சேவை முக்கிய போக்குவரத்தாக இருந்து வரு கிறது. இது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல இந்த ரயில் சேவை மிகவும் உதவுகிறது. செங்கல்பட்டு - தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில்பாதை முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினசரி நிறைய பயணிகள் பயணிக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்துகிறார்கள். இந்த வழித்தடத்தில் தினசரி நிறைய மின்சார ரயில்கள் இயக்க ப்படுகின்றன. இந்தியா வின் பல நகரங்களில்ஏசி ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை யிலும் ஏசி ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் ஏசி மின்சார ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு “வந்தே பாரத்” ரயில்களும் தயாரிக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு குளிர்சாதன வசதி கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட்டன. 12 பெட்டிகள் புதிய ஏசி ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன. அவை குளிர்சாதன வசதி கொண்டது. இந்த ரயிலில் 1,320 இருக்கை கள் உள்ளன. ஒரே நேரத்தில் 5,700 பேர் வரை பயணிக்க லாம். தானியங்கி கதவுகள் இதில் உள்ளன. இதனால் ரயிலில் படியில் பயணம் செய்வது தவிர்க்கப்படும். ஏசி ரயில் அட்டவணை சென்னை ஏசி ரயில் அட்டவணை பற்றிய தகவல்கள் வந்துள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 7 மணி, பகல் 3.45 மணி, இரவு 7.50 மணிக்கு ரயில் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து காலை 9 மணி, மாலை 5.45 மணிக்கு சென்னை கடற்கரைக்கு ரயில் வரும். தாம்பரத்தில் இருந்து சென்னை கடற் கரைக்கும் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங் களத்தூர், தாம்பரம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர், சென்னை பூங்கா, சென்னை கோட்டை ஆகிய நிலையங்களில் நிற்கும். இந்த ரயில் சேவை ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.