சென்னை, ஜூன் 12- ‘நீட்’ தேர்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண் டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலா ளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நீட் தேர்வு காரணமாக இளங்கலை மருத்துவக் கல்வி சேர்க்கையில் தமிழ் நாடு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் படுவதால், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என போராடி வருகின்ற னர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போடுவதில் மாறுபாடுகள், குறிப்பிட்ட ஒரு பயிற்சி மையத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் ஒரே அளவு எண்ணிக்கை யில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் தேர்வானது, இதே போல் 67 மாணவர்கள் ஒரே அளவு மதிப்பெண் பெற்றது, ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்து சமூக ஊடகங்களில் வெளியானது, 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் தோல்வியுறுவது, 12-ஆம் வகுப்பு தேர்வில் மிக குறைந்த மதிப் பெண் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதுமான துயர நிலை போன்ற ஏராளமான குளறுபடிகளும், முரண்பாடுகளும் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நீடித்து வரும் அமைதி யின்மையின் காரணமாக மாணவர் களின் மருத்துவக் கல்வி கனவு தகர்க்கப் பட்டு வருவதை கருத்தில் கொண்டு, நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித் துள்ளார். மாபெரும் வெற்றி பெறுவோம்! விக்கிரவாண்டி சட்டமன்ற தொகு திக்கான இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரி வித்துக் கொள்கிறது. மேலும் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் இணை ந்து மாபெரும் வெற்றியை உறுதி செய் யும் என்றும் மற்றொரு அறிக்கையில் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.