“மின் துறையை தனியார்மய மாக்கும் முதல் படியாக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வரப்படு கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும்” என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. தஞ்சாவூரில் வெள்ளி, சனிக்கிழமை களில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாரன் துவக்க உரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில், “மின் வாரியத்தில் உள்ள 65,000 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கேங்மேன் ஊழியர்களை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, பிப்.25 அன்று அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலு வலகங்கள் முன்பும், மார்ச் 25 அன்று மண்டல தலைமைப் பொறியாளர் அலு வலகம் முன்பும் தர்ணா நடத்துவது, ஏப்ரல் இறுதியில், சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்துவது” என தீர்மானிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந் திரன், “கடந்த நான்கு ஆண்டுகளில் 15,000 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ள னர். ஆனால் புதிய நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பல ஆயிரம் பணியிடங்கள் இழக்கப்படும் அபா யம் உள்ளது. கேரள அரசைப் போல தமிழக அரசும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நேரடியாக செயல்படுத்த வேண்டும்” என்றார். கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் எம்.வெங்கடேசன், மாவட்டச் செயலா ளர் சி.ஜெயபால், துணைச் செயலாளர் கள் பழனிவேலு, ரவிக்குமார், ரவிச் சந்திரன், பீர் முகமது ஷா, தஞ்சை மண்டல செயலாளர் ராஜாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.