tamilnadu

img

சிஐடியு மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

சிஐடியு மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

பெங்களூரு, ஜன.18- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் 17வது அகில இந்திய மாநாடு ஜனவரி 18  புதனன்று பெங்களூ ருவில் பேரெழுச்சியுடன் தொடங்கியது. சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா மாநாட்டுச் செங்கொடியை ஏற்றிவைத்த உணர்ச்சி மிகு நிகழ்வுடன் மாநாடுதொடங்கியது. தியாகிகளின் நிலமான கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘‘கேஜிஎஃப் தியாகிகளின் ஜோதி’’க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக செந்தொண்டர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். மாநாடு நடைபெறும் இடமான பெங்களூரு அரண்மனை மைதா னத்திற்கு முன்னாள் சிஐடியு தேசிய துணைத் தலைவர் தோழர் ஷியாமள் சக்ரவர்த்தி பெயரும், மாநாட்டு அரங்கிற்கு முன்னாள் அகில இந்திய பொருளாளர் ரஞ்சனா நிருலா மற்றும் சிஐடியுவின் தேசிய துணைத் தலைவர் தோழர் ரகுநாத் சிங் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஆளும்  வர்க்கக் குண்டர்களால் கொடூர மாகக் கொல்லப்பட்ட சிமெண்ட்  தொழிலாளியும்  சிஐடியுஅமைப்பாள ருமான தியாகி தோழர் மணீஷ் சுக்லா வின் நினைவாக மாநாட்டு மண்டபத்தின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர் கள் தியாகிகள் நினைவிடத்திற்கு செவ்வ ணக்கம் செலுத்தினர். மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு அகில இந்தியத் தலைவர் கே.ஹேமலதா தலைமை வகித்தார்.வரவேற்புக்குழு தலைவர் கே.சுப்பாராவ் வரவேற்றுப் பேசினார். பெங்களூரு போன்ற நகரத்தில் இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்துவது எளிதான காரியம் அல்ல என் றார்.  மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் போது, ​​கர்நாடக மாநில சிஐடியுவின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிடமிருந்தும் பெரும் ஆதரவைப் பெற்றனர் என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1500 பிரதிநிதிகள்

சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென், உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (WFTU)  பொதுச் செயலாளர் பாம்பிஸ் கிரிட்சிஸை மேடைக்கு அழைத்தார். நாடு தழுவிய போராட்டங்களை நடத்தும் சிஐடியு வுடன் இணைந்து தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையில் உள்ள மத்திய தொழிற்சங்க தலைவர்களையும் அவர் அழைத்தார். 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 62 லட்சம் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 1500 பிரதிநிதிகள் மற்றும் சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் தொடக்க அமர்வில் அறிமுக உரை யாற்றிய தபன் சென், ஒருபுறம் உழைக்கும் மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தின் மீது முடிவில்லாமல் பெருகிவரும் தாக்குதல்கள்; மறுபுறம் ஜனநாயகத்தின் மீதான சர்வாதிகார - மதவெறித் தாக்குதல்களின் பின்னணி யில் சிஐடியு 17- வது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.   உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது; ஆளும் வர்க்கங்களின் கொடிய சுரண்டல் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு முழுவதும் வலுவான எதிர்ப்பைக் கட்டமைக்கும் பணி ஆகியவற்றை நிறைவேற்றிட,  சிஐடியு மாநாடு ஒன்றுபட்ட வர்க்க நடவடிக்கைகளின் எதிர்கால பணிகள்  குறித்து விவாதிக்கும்; தொழிலாளர் வர்க்கத்திற்கு பேரழிவு தருகிற; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை செய்கிற தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கை களின் பாதையை மாற்றுவதற்கான போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தவும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஹேமலதா தமது தலைமையுரையில் கூறினார்.

மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள்

மாநாட்டில்  அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  ஐஎன்டியுசி துணைத்தலைவர் ஆர். சந்திரசேகரன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், எச்எம்எஸ் பொதுச்செயலாளர் நாகநாத், ஏஐயுடியுசி தலைவர் கே.சோமசேகர் டியூசிசி தேசிய செயலாளர் பி.ராஜேந்திரன் நாயர்,  யுடியூசி பொதுச் செயலாளர் அசோக் கோஷ்,சோனியா ஜார்ஜ் (சேவா), கிளிஃப்டன்(தேசியச் செயலாளர், ஏஐசிசிடியு) மற்றும் வி.வேலுசாமி (தேசியச் செயலாளர், தொமுச) ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

 

  1. மாநாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகள்
  2. செந்தொண்டர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்  சிஐடியு தலைவர் ஹேமலதா
  3. உலக தொழிற்சங்க சம்மேளன பொதுச் செயலாளர் பாம்பிஸ் கிரித்சிஸ், தியாகிகளுக்கு செவ்வணக்கம்
  4. சிஐடியு துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் தியாகிகளுக்கு மரியாதை
  5. கேஜிஎப் தியாகிகள் சுடர்