tamilnadu

img

குட்டித்தம்பியின் ஓவியம் - உதயசங்கர்

வெண்பா ஓவிய நோட்டில் ஓவி யம் வரைந்து கொண்டிருந் தாள். நாளைக்கு ஓவிய ஆசி ரியர் உங்களுக்குப் பிடித்த ஓவியத்தை வரைந்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டார். என்ன வரையலாம்? இரண்டு மலைகளுக்கு நடுவில் சூரி யன் உதிப்பதைப் போல வரையலாமா? வகுப்பில் கொள்ளைப்பேரு அதைத் தான்  வரைந்து கொண்டு வருவார்கள். சரி. ஒரு  ஆறு, இரண்டு தென்னை மரம், நான்கு  பறவைகள் பறக்கிற மாதிரி வரையலாமா?  ம்ஹூம் அது ரொம்ப கஷ்டம். மயில் வரை யலாமா? அதில் தோகை வரையணுமே. ஓவிய ஆசிரியர் வரைந்து சொல்லிக் கொடுக் கிற கத்தரிக்காயை வரையலாமா? அவர் என்ன சொன்னார்? நீங்களே சொந்  தமா யோசிச்சு வரைந்து கொண்டு வாருங் கள் என்று தானே. வெண்பாவுக்குக் குழப்ப மாக இருந்தது. தலையைச் சொறிந்தாள். பென்சிலை நாடியில் வைத்துக் கொண்டு யோசித்தாள். அவளுக்கு முன்னால் ரஃப் நோட்டும் ஓவிய நோட்டும், கலர் பென்சில்களும் காத்  திருந்தன. அவளையே பார்த்துக் கொண்டி ருந்தன. வெண்பா என்ன வரைவாள் என்று  அவைகளுக்கும் தெரிந்து கொள்ள ஆசை. அப்போது வெண்பாவின் குட்டித்தம்பி  சிபி அவளுக்குப் பக்கத்தில் வந்தான். அவன்  வருவதைக் கவனிக்கவில்லை. முன்னாடி மாதிரி தவழ்ந்து வரவில்லை. இல்லை. இப்  போது எழுந்து நடந்து வருவான். பெரிய  பையன் ஆயிட்டான். ஆனால் என்ன? புதி தாக எந்தப் பொருள் கிடைத்தாலும் ஒன்று  வாயில் வைத்து சவைத்துப் பார்ப்பான். இல்லை என்றால் தரையிலோ சுவரிலோ கோடுகளைக் போடுவான். அம்மா சொல்லி யிருக்கிறார். வெண்பாவும் தம்பி மாதிரி குழந்தையாக இருந்தபோது அப்படிக் கிறுக்குவாள். ஆமாம். அவள் சுவரில் வரைந்த கோடுகளும் வட்டங்களும் இன்ன மும் சுவரில் இருக்கின்றன.

ஐய்யோ! நல்லாவே இல்லை. சிபி வந்து ரஃப் நோட்டை எடுத்தான். அருகில் இருந்த நீலநிறப் பென்சிலை எடுத்தான். ரஃப் நோட்டில் கோடு போட  ஆரம்பித்தான். அப்போது தான் வெண்பா  அவனைக் கவனித்தாள். சிபி ஒரு கோடு போட்டு விட்டு, அக்காவைப் பார்த்துச் சிரித்  தான். ”ஐய்யோ! ஒரே சிரிப்பா வருது.. குட்டித்  தம்பி படம் வரையறான்..” வெண்பா கைதட்டி “வெரிகுட் தம்பி” என்றாள். உடனே சிபியும் பென்சிலைக் கீழே போட்டு விட்டு கைதட்டினான். பிறகு  சிவப்புக்கலர் பென்சிலை எடுத்தான். ஒரு கோடு போட்டான். அதுக்குக் கீழே  ஒரு முட்டை இரண்டு முட்டை மூணு முட்டை  நாலு முட்டை போட்டான். “கார் கார்” என்று மழலையாகச் சொன்  னான். வெண்பாவுக்குச் சிரிப்பு பொங்கியது. மறுபடியும் கருப்பு நிறப் பென்சிலை எடுத்தான். ஐயே! ஒரு முட்டை போட்டு அதுல புள்ளி வைச்சு கண்ணுங்கிறான். நடுவில் ஒருகோடு போட்டு வாய் என்கிறான்… யாருன்னா கேட்டா அக்கா என்கிறான்.. நான் என்ன இப்படியா இருக்கேன்?

வெண்பா சிபி வரைவதையே பார்த்துக்  கொண்டிருந்தாள். அவன் எந்த ஓவிய ஆசி ரியரிடமும் பாடம் படிக்காமலே வரை கிறானே என்று யோசித்தாள். அப்பா சொன்  னது ஞாபகத்துக்கு வந்தது. எல்லாக்குழந் தைகளும் முதலில் ஓவியம் வரைந்து பார்ப்  பார்கள். வெண்பா யோசித்து முடிப்பதற்குள், சதுரம் சதுரமா போட்டான். அதுக்குக் கீழே  வட்டம் வட்டமா போட்டான். எல்லா சது ரத்துக்கும் மேலே ஒரு கோட்டை நேரா இழுத்து விட்டான். அது என்னடான்னு கேட்டா அது குப்குப் குப் குப் கூகூ கூகூகூ வாம். வெண்பாவுக்கு வேடிக்கையாக இருந்தது. இரண்டு முட்டை போட்டான். அந்த முட்டைக்குக் கீழே நீளமா இரண்டு கோடு  போட்டான். அப்புறம் அந்தக் கோட்டுக்குக்  குறுக்கே இரண்டு கோடு போட்டான். முட்டையில கண், மூக்கு, வாய் எல்லாம்  கோடு கோடாகப் போட்டான். வாய்க்கு மேலே ஒரு கோடு போட்டான்.. வாய்க்குக் கீழே நாலு கோடு போட்டான். தாத்தா என்றான். பக்கத்தில் இருந்த படத்தில் நெத்தியில் ஒரு புள்ளி வைச்சான்.. பாட்டி  என்றான்.. எனக்குக் கோபம் வந்துருச்சி.. தாத்தா பாட்டி எவ்வளவு அழகா இருப் பாங்க.. பாரு பாரு.. நான் போய் தாத்தா பாட்டியைக் கூட்டிட்டு வாரேன். வெண்பா ஓடிப்போய் தாத்தாவையும் பாட்டியையும் அழைத்து வந்தாள். “தாத்தா, பாட்டி, சிபி உங்களை எப்படி வரைஞ்சிருக்கான் பாருங்களேன்..” தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள். குட்டித்தம்பி வரைந்த படத்தைப் பார்த்து விட்டு திட்டுவார்கள் என்று நினைத்தால், அவர்கள் என்னடாவென்றால், “ஆகா என்ன அழகா வரைஞ்சிருக்கான்  எஞ்செல்லம்.. பின்னாடி பெரிய ஓவியராக  வருவான் குட்டிப்பையல்” என்று கொஞ்சு கிறார்கள். இந்தப் பெரியவர்களே இப்படித்தான். தாத்தாவைப் பார்த்ததும் அவரிடம் ஓடிப்  போய் விட்டான். வெண்பாவுக்கு மறுபடி யும் கவலை வந்து விட்டது. என்ன படம் வரையலாம்? தம்பி மாதிரியே வரையலாமா? அவள் நீலநிறப் பென்சிலை எடுத்தாள்.