tamilnadu

img

ஓர் அறிவியல் திருவிழா

கோயில் கொடை, மதம் சார்ந்த திருவிழாக்கள், பண்டிகைகள் என பாரம்  பரிய கலாச்சார பண்பாட்டு விழாக்கள்  கிராமங்களில் நடப்பது வழக்கம். அதைத்  தாண்டி சுதந்திர தினம், குடியரசு தினம் என நடப்பதுமுண்டு. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக கிராம அறி வியல் திருவிழா நடத்தி வியப்பில் ஆழ்த்  தினர் திருநந்திக்கரை மக்கள். தமிழ்  நாடு அறிவியல் இயக்க செயற்பாட்டா ளர்கள் கடந்த 26 ஆண்டுகளாக இந்த  அறிவியல் திருவிழாவை பெரும் கொண்  டாட்டங்களுடன் மக்கள் விழாவாக நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை யை போர்த்திக்கொண்ட கிராமம் திரு நந்திக்கரை. இங்கு தொல்லியல் சிறப்பு மிக்க சமணர்கால குடைவரை கோயில் உள்ளது. அதன் அருகில் நந்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நந்தீஸ்வரன் கோயில் பன்னிரு சிவத்தலங்களில் ஒன்றாகும். முத்தாரம்மன் கோயிலும் உள்ளது. இந்த கோயில்களில் தமிழ்  மற்றும் மலையாள கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். கதகளி, கதாபிரசங்  கம் என கேரள கலை வடிவங்களும், மலை யாளம், தமிழ் நாடகங்கள், வில்லுப் பாட்டு, கிராமத்து இளைஞர்களின் நடனம், கலை நிகழ்ச்சிகள் என களைகட்டும். இத்தகு ஆன்மீக பாரம்பரியத்தை கைவிடாமல் அறிவியல் இயக்கத்தை யும் முன்னெடுப்பதுதான் திருநந்திக் கரையின் சிறப்பு. அறிவியல் இயக்கத் தின் மூலம் படிப்பகம் தொடங்கி கிராம வளர்ச்சி மையம் இளைஞர்களின் திறன்  மேம்பாட்டுக்கு வழிகாட்டுகிறது. அர சுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை  ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் 16  ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது தான் கிராம அறிவியல் திருவிழா, இது  இங்குள்ள இளைஞர்களின் முன்னேற் றத்திலும் அவர்களைப் பாராட்டி உச்சி  முகர்வதிலும் முத்திரை பதித்து வரு கிறது. அண்மையில் 16 ஆவது கிராம அறி வியல் திருவிழா நடத்தப்பட்டது. அதில்  திருநந்திக்கரை அரசுப்பள்ளி மாண வர்களுக்கு மட்டுமல்லாது 10 மற்றும் 12  வகுப்புகளில் வெற்றிபெற்ற தனியார்  பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டு  தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய நாடாளுமன்ற நடுத்தளத்தில்  நடைபெற்ற மாணவர் நாடாளுமன்றத் தில் உரையாற்றி திருநந்திக்கரை கிரா மத்திற்கு பெருமை சேர்த்த- தில்லி பல்க லைக் கழக மாணவன் ஸ்ரீ ஆதித்தன், புரோ கபடி விளையாட்டில் இந்திய அள வில் சாதனை புரிந்த திருநந்திக்கரை மண்ணின் விளையாட்டு வீரர் என்.ஜெயசூர்யா. இளம் மருத்துவர்கள் அலீனா விஜய், லக்‌ஷமிகா, சி.கிருஷ்ணா, ஆர்.பி. ஆதிரா, முனைவர் எம்.வி.சங்கீதா, முனைவர் எல்.டி.சஜி உள்ளிட்ட சாத னையாளர்களுக்கு பாராட்டும் நினை வுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. முனை வர் எம்.வி.சங்கீதா இந்தியில் எழுதிய ஆய்வு நூலும் வெளியிடப்பட்டது.  கோவிட் பெருந்தொற்று காலத்தில் சுகாதார சேவை புரிந்த திருநந்திக்கரை கிராம செவிலியர் நாகம்மாவுக்கும் திற்பரப்பு பேரூராட்சியின் 19 தூய்மைப்  பணியாளர்களுக்கும் பாராட்டு தெரி வித்து விருது வழங்கப்பட்டது. 40  ஆண்டுகளுகளாக, இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கு வித்தும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மறு வாழ்வு ஏற்படுத்தியும் தொடர்ச்சியாக சமூக, மக்கள் நல பணியில் தன்னல மற்று ஈடுபட்டுவரும் எஸ்.அலெக் சாண்டரை பாராட்டி விருது வழங்கப் பட்டது. புத்தகம், ஓவியம் – கையெழுத்து கண்காட்சிகள், உணவுத் திருவிழா, நடனம், கலை நிகழ்ச்சிகள் என கிராம  மக்கள் அனைவரையும் பார்வையா ளர்களாக அல்லாமல் பங்கேற்பாளர் களாக்கி சிறப்பித்தனர். அதிகரித்துவரும் போதை பழக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் வண்ணம் போதையில்லா கிராமம் உருவாக்கும் நோக்கில் போதைக்கு எதிராக விழிப்பு ணர்வு வாசகம் எழுதும் இயக்கம் நடை பெற்றது. போதை ஒரு விஷம் என்ற முதல் வாசகத்தை எழுதி குலசேகரம் காவல் ஆய்வாளர் கெ.பாலமுருகன் துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலா ளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டச்  செயலாளர் சிவஸ்ரீரமேஷ், ஒன்றிய துணைத் தலைவர் பி.டி.திவாகரன் பிள்ளை, சாரதாகிருஷ்ணா ஹோமியோ பதி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வி. சுகதன், வார்டு உறுப்பி னர் பி.ஷிஜா சந்திரன், கூட்டுறவு சங்க  முன்னாள் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் எம்.சசிகுமார், திற்பரப்பு பேரூ ராட்சி துணை தலைவர் எஸ்.சி.ஸ்டா லின்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.