சிவகங்கை, அக்.8- சிவகங்கை மாவட்டம் கொல்லங் குடியை அடுத்த விட்டனேரியில் அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக் கப்பட்டது. விட்டனேரியைச் சேர்ந்த தினேஷ் சேதுபதி, பிரபாகர் ஆகியோர் அப்பகு தியில் எழுத்துடைய கல் ஒன்று இருப்ப தாக சிவகங்கை தொல்நடைக் குழுவின ருக்கு தகவல் தெரிவித்தனர்.இதை யடுத்து, சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வா ளர் க.சரவணன்ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விட்டனேரி ஊரிலிருந்து பின் பகுதியில் பெரிய கிளுவச்சி செல்லும் காட்டுப் பாதையில் இடத்தை சுத்தம் செய்யும்பொழுது இக்கல்வெட்டு கிடைத்துள்ளது. இந்த கல்வெட்டு அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு என தெரியவந்துள்ளது. ஆச்ரயம் என்ற வடசொல், கல்வெட் டுகளில் ஆசிரியம் என்று குறிப்பிடப் படுகிறது. ஆசிரியம் என்பது அடைக்கலம், பாதுகாப்பு மற்றும் ஆத ரவை குறிக்கும். பொதுவாக அப்பகு தியை ஆள்பவர்கள் பாடிக் காவல் ஏற்ப டுத்தி ஆட்சியாளர்களால் வழங்கப் பட்ட தான தர்மத்தை காத்தல் மற்றும் ஆதரவு வேண்டுவோருக்கு ஆதரவு அளித்தலை இவ்வகை ஆசிரியம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் இரண்டு பக்கங்களில் கல்வெட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இது 13ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது, ஒரு பக்கத்தில் 12 வரிகளும், மற் றொரு பக்கத்தில் ஒன்பது வரிகளும் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு மூன்றடி உயரத்திலும் ஒன்றேகால் அடி அகலத்திலும் எழுதப்பட்டு உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டில், இவ்வூரானது கீழ்மங்கல நாட்டு வழுதிவாழ் மங்க லமான என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் வாளவ மாணிக்கத்து என்பது இப்பகுதியின் ஆட்சியாளரான மாளவ சக்கரவர்த்திகளை குறிக்கிறது. நிலையத்தில் இருப்பவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆசிரியம் என்று ஒரு பக்கத்தில் முடிகிறது.
அஞ்சினார் புகலிடம்
மற்றொரு பக்கத்தில் மேலைக் கோட்டையான கலங்காத கண்டரான அஞ்சினார் புகலிடம் காத்ததற்கு இவ்வூர் ஆசிரியம் என்றும் வருகிறது. அவையதானம் அல்லது அடைக் கல தானம் பல்வேறு காரணங்களால் தம்மை காக்க வேண்டி வருபவர்க ளுக்கு, அவர்களை ஏற்று வேண்டியதை செய்து கொடுத்து பாதுகாப்பதாகும். இதற்கென தனியாக குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இவை பெரும்பா லும் சமணக் கோவில்களுக்கு அருகில் இருந்தன. இந்த இடங்கள் அஞ்சி னார் புகலிடம் என்று வழங்கப்பட்டு உள்ளன. ஆனாலும் இவை பின்னர் வணிகர்கள் தங்களது வணிகத்தின் போது பாதுகாப்பாக தங்குமிடமாக ஆட்சியாளர்களால் மாற்றம் பெற்று உள்ளன. அவ்வாறாக இவ்விடத்தை வணிகர்களுக்கு அஞ்சினார் புக லிடமாக வழங்கப்பட்ட இடமாகவே கருதலாம்.
மாளவச் சக்கரவர்த்திகள்
வாளவர் மாணிக்கத்து என்பது மாள வர் மாணிக்கம் மாளவ சக்கரவர்த்தி களை குறிக்கிறது. இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற் றாண்டு வரை பாண்டியர் அரசில் செல்வாக்கு பெற்றிருந்தனர். இவர்கள் ஊரார்க்கும் நாட்டார்க்கும் நிர்வாகம் தொடர்பான அரசு ஆணைகளை நிறை வேற்றி வந்திருக்கிறார்கள்.
மங்கல நாடு
இக்கல்வெட்டில் குறிக்கப்படும் மங்கல நாடு என்பது கீழ் மங்கல நாடு, மேல் மங்கல நாடு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. இது திருக் கானப் பேர் கூற்றத்தில் அமைந்திருந் தது. இவை இன்றைய காளையார் கோவில் சிவகங்கை வட்டங்களை உள்ளடக்கியதாகும்.
வழுதிவாழ் மங்கலம்
கல்வெட்டில் குறிப்பிடப்படும் வழுதிவாழ் மங்கலம் என்பது இப்பகுதி யாக இருக்கலாம். வழுதி வாள் மங்க லம் முனைப் பாண்டிய நாட்டு திருக் கானப்பேர் கூற்றத்தில் அமைந்திருந் ததை பத்தாம் நூற்றாண்டு பராந்தகச் சோழன் ஆட்சியில், பரகேசரி மூவேந்த வேளாண் கல்வெட்டில் இடம்பெற்று இருந்ததை இந்தியத் தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. தமிழகப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியம் கல்வெட்டு இதுவரை புதுக்கோட்டைப் பகுதியில் அதிகமாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் சிவகங்கை பகுதி யில் முடிகண்டம் மற்றும் சக்கந்தியில் இவ்வகை கல்வெட்டுகள் முன்னே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்வெட்டின் முதன்மை கருதி கல்வெட்டை சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில், சிவகங்கை தொல் நடைக் குழு ஒப்படைக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.