அரியலூர், நவ.26- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் சுமார் 4 தலைமுறையாக வசித்து வருகின்றனர். பழங்குடியின இருளர் மக்கள் குடியிருப்பு பகுதி வன சரகத்திற்குட்பட்ட பகுதி. மேலும் இவர்களுக்கு இதில் விவசாய நிலமும் உண்டு. இந்நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு வனத்துறையினர் விவசாய நிலங்களை பறிமுதல் செய்து கொண்டனர். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், இருளர் இன மக்கள் தங்கள் வீடு களில் உள்ள பொருட்கள், பாத்திரங்கள், காய்கறிகளை எடுத்துக்கொண்டு மயா னத்தில் குடியேறி சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் வராத நிலை யில், உடையார்பாளையம் காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை யினர் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.