tamilnadu

img

கொல்லம் தந்த கொள்கைப் போராளி!

கொல்லம் தந்த கொள்கைப் போராளி!'

கொல்லம் மண்ணின் மைந்த ரும், திடமான கொள்கைப் போராளியுமான தோழர் எம்.ஏ. பேபி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டுள்ளார். புரட்சிகர இயக்கத்தில் ஐந்து தசாப்தங்க ளுக்கும் மேலாக தன்னை அர்ப்பணித்துள்ள இவர், மாணவர் இயக்கத்தில் தொடங்கி கட்சியின் தலைமைப் பொறுப்பு வரை உயர்ந்துள்ளார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி பிறந்த பேபியின் முழுப்பெயர் மரியம் அலெக்சாண்டர் பேபி ஆகும். கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பிரக்குளம் பஞ்சாயத்து எல்பி பள்ளி, என்எஸ்எஸ் பள்ளி மற்றும் கொல்லம் எஸ்என் கல்லூரியில் கல்வி பயின்றார். 1974இல் இந்திய மாணவர் சங்க மத்திய நிர்வாகக் குழுவின் இளைய உறுப்பினராக தேர்வுபெற்ற இவர், 1975இல் மாணவர் சங்க கேரள மாநிலத் தலைவராகவும், 1977இல் சிபிஐ(எம்) கொல்லம் மாவட்டக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978ஆம் ஆண்டு ஹவானாவில் நடைபெற்ற உலக இளைஞர் மற்றும் மாணவர் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக பங்கேற்ற இவர், 1979இல் மாணவர் சங்க இந்தியத் தலைவராகவும், 1984 இல் சிபிஐ(எம்) கேரள மாநிலக் குழு உறுப்பினரா கவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989இல் அவர் ‘ஸ்வரலயா’ உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி னார். 1986 முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது, அவையின் தலை வருக்கான பட்டியலில் இடம்பெற்ற பெருமைக்குரி யவர். 1989இல் சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பி னராகவும், 1992இல் மத்திய செயற்குழு உறுப்பின ராகவும் உயர்ந்தார். 1997இல் ஐ.நா. பொதுச் சபை யில் உரை நிகழ்த்திய பெருமைக்குரியவர் இவர். 2006இல் குண்டரா தொகுதியிலிருந்து கேரள மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெ டுக்கப்பட்ட பேபி, அதே ஆண்டு கேரள மாநில கல்வி  மற்றும் கலாச்சார அமைச்சராகவும் பொறுப்பேற் றார். 2012இல் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உயர்ந்தார். அவசரநிலைக் காலத்தில் கடும் சித்ரவதை களையும், சிறை வாசத்தையும் அனுபவித்த இவர் பல முறை சிறை சென்றவர். கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்தபோது, கேரள கலாமண்டலத்தை தன்னாட்சி பல்கலைக்கழகமாக உயர்த்தினார்; கலைஞர்கள் நல நிதிச் சட்டத்தை நிறைவேற்றினார்; உயர்கல்வி கவுன்சில் சட்டத்தின் மூலம் நிறுவினார். கலாச்சாரத் துறையில் அவரது பங்களிப்பு களுக்காக 2013ஆம் ஆண்டில் அபினவ் ரங்க மண்டல் நிறுவிய முதல் ‘அர்ஜுன் சிங் விருது’ அவ ருக்கு வழங்கப்பட்டது. தோழர் பேபி “என்னுடைய எஸ்எப்ஐ நாட்கள்”, “இந்த இரத்தத்தை பாருங்கள்: புஷ்ஷுக்கு எதிரான கலைஞர்கள்”, “எம்ஜிஎஸ் அம்பலப் படுத்தப்பட்டது”, “அறிவின் ஒளி நாட்டின் பிரகாசம்”, “கிறிஸ்து மார்க்ஸ் ஸ்ரீ நாராயண குரு”, “நோம் சாம்ஸ்கி: நூற்றாண்டின் மனசாட்சி”, “டாக்டர் வேலு குட்டி அரயன்”, “ஓஎன்வி காதல் கடிதங்களில் உப்பு”, “பிலிப்போஸ் மார் கிறிசோஸ்டம் தி கிரேட் மெட்ரோ பொலிட்டன்” மற்றும் “இளைஞர் இயக்கத்தின் வரலாறு” ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். “கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப் பேற்பது பெரும் சவாலான காலகட்டத்தில் தான்,” என்று தேர்வுக்குப் பிறகு பேசிய தோழர் பேபி, “உழைக்கும் மக்களின் போராட்டங்களை வலுப் படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்” என்று உறுதியளித்தார். தோழர் பேபி அவர்களின் மனைவி பெட்டி லூயிஸ். இவர்களுக்கு அசோக் பெட்டி நெல்சன் என்ற ஒரு மகனும், சனிதா என்ற மருமகளும், தனாய் மற்றும் ரன் என்ற இரு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.