tamilnadu

img

தனிப்பட்ட தகவல்களை திருடும் புதிய மால்வேர் “லூவாட்ரீம்”

இணையத்தில் தகவல் திருட்டு  என்பது தற்போது சர்வசாதாரண மாக நிகழ்ந்து வருகிறது. இணைய உலாவி கள் முதல் சமூக ஊட கங்கள் வரை பரவ லாய் தகவல் திருட்டு  நடைபெறுகிறது. இந்த மறைமுக தக வல் சுரண்டலுக்கு அப்பால் நேரடியாக தனிப்பட்ட தகவல்  களை களவாடும் நோக்கிலான மால்வேர்களின் அச்சுறுத்த லும் இணையத்தில் அதிகம் நிலவி வரும்  நிலையில், தனிப்பட்ட தகவல்களை திரு டும் புதிய மால்வேராக “லூவாட்ரீம்” என்ற  மால் வேர் அடியெடுத்து வைத்துள்ளதாக ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. ஒன்றிய அரசின் எச்சரிக்கை குறிப் பில், “லூவாட்ரீம்” மால்வேர், ஓஎஸ் இயங்குதளத்தின் தகவல்கள் முதல் ஐபி  முகவரி வரை அனைத்தையும் திருடும்.  குறிப்பாக அலுவலக நெட்வொர்க் அட்  மினாக இருந்தாலும் தகவல்களை குறி வைத்து திருடும். இவ்வாறு திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு, ஆபத்தை விளைவிக்கும் இதர வைரஸ்களை வர வேற்கும் வகையில் பின்வாசலை திறந்து  வைக்கும். இதற்காக ஹேக்கர்களின் கைங்கரியமாகவும் இந்த லூவாட்ரீம் மால்வேர்கள் இணையத்தில் பரப்பப்  பட்டு வருகின்றன. மத்திய கிழக்கு, மேற்கு  ஐரோப்பா மற்றும் தெற்காசியாவில் அதி களவில் அச்சுறுத்தலை விளைவித்து வரும் இந்த “லூவாட்ரீம்” மால்வேர் ஊடு ருவல் காரணமாக, இணையத்தில் புழங்குவோர் எச்சரிக்கையாக இருப்பது  நல்லது” எனக் கூறியுள்ளது.