tamilnadu

img

இலங்கை ஜனாதிபதி திஸாநாயக்கவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

மோடி உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டறிக்கை வெளியீடு

புதுதில்லி, டிச. 16 - இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க - பிரதமர்  மோடி இடையிலான சந்திப்பில், இரு நாட்டு மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையை முன்னெடுப்பதென ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மீனவர் விவகாரத்தில் மூர்க்கத்தன மாக நடந்து கொள்வதை தவிர்க்க  எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் தொடர்பாகவும் இருநாட்டுத் தலை வர்களின் சந்திப்பில் பேசப் பட்டுள்ளது. இடதுசாரி ஜனாதிபதி இலங்கை வரலாற்றில், இடது சாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா தலைமையில் அமைந்த தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இடதுசாரி தலைவ ரான அனுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்நிலையில், திஸாநாயக்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிறன்று மாலை இந்தியா வந்தார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் தில்லி வந்த திஸா நாயக்கவை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகி யோரை திஸாநாயக்க தனித்தனியே சந்தித்துப் பேசினார்.  இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் உத்திப் பூர்வமாக விரிவாக்கம் செய்வதற்கான வழிகள் குறித்தும், இருநாடுகளுக்கு இடையேயான ஒட்டு மொத்த உறவுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. முர்மு - மோடி அரசு வரவேற்பு அதைத்தொடர்ந்து, திங்க ளன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் இலங்கை ஜனாதி பதிக்கு முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் திஸா நாயக்கவை வரவேற்றனர்

தொடர்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி யுடன் திஸாநாயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக இந்தியா - இலங்கை உறவுகளை வலுப்படுத்து வது குறித்தும், மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். மீனவர் பிரச்சனைக்கு தீர்வு... அப்போது, இலங்கை ஜனாதிபதி பேசுகையில், “ஜனாதிபதியாக பதவி யேற்ற பிறகு நான் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணமாக புது தில்லிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அழைப்பு விடுத்ததற்கும் இங்கு அளித்த விருந்தோம்பலுக்கும் நான் இந்திய அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காண ஆர்வமுடன் காத்திருக் கிறேன். மீனவர் பிரச்சனை இருநாடு களுக்கும்   முக்கியமான ஒன்றாகும். தமிழ்நாடு மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு தீர்வுகாணப்பட வேண்டும். இரட்டை மடி வலையை பயன்படுத்துவது மீன்பிடித் தொழிலுக்கே பேரழிவாக அமையும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை குறித்தும் மோடியுடன் விவாதித்தேன்” என்றார்.  கலாச்சார உறவு மேம்பாடு பிரதமர் மோடி பேசுகையில், “இந்தி யாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது இலங்கையிலும் அது கொண்டாடப் பட்டது. சென்னை - யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை, கப்பல் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாச்சார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் தலை மன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள் ளோம்” என்றார்.

இந்தியா - இலங்கை கூட்டறிக்கை

பின்னர் இரு நாடுகள் தரப்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.  “கடந்த ஆண்டுகளில் அதிகரித்த அரசியல் தொடர்புகள் மற்றும் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்து வதற்கான தங்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்ட இரு தலைவர்களும், மீண்டும் இருநாடுகளுக்கு இடை யிலான அரசியல் உறவுகளை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். இரு நாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். மீனவர் விவகாரத்தில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதை தவிர்ப்ப தற்கு எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகளையும் சுட்டிக்காட்டினர். அண்மையில் கொழும்புவில் நடைபெற்ற மீன்வளம் தொடர்பான கூட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அவர்கள் வர வேற்றனர். ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தை மூலம் நீண்ட காலம் நிலைக்கக் கூடிய பரஸ்பர தீர்வை  எட்ட முடியும் என்று இரு தலைவர் களும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்தியா- இலங்கை இடையே உள்ள சிறப்பு உறவை கருத்தில் கொண்டு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்த போது இந்தியா செய்த அவசரகால நிதியுதவியை குறிப்பிட்டு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்” என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.