தலைவர்கள் இரங்கல்
நிவாரணம் அறிவிப்பு
மதுரை, ஆக.26- மதுரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் சுற்றுலாப் பயணிகள் (தனியார் பார்ட்டி கோச்) பய ணித்த ரயில்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உடல்கருகி பலியாகினர். எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி லக்னோவிலிருந்து சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் நாகர்கோவிலில் உள்ள பத்மநாப புரம் அரண்மனையைப் பார்த்துவிட்டு மது ரைக்கு புனலூர்-மதுரை விரைவு ரயிலில் பயணம் செய்தனர். இந்த ரயில் சனிக்கிழமை அதிகாலை 3.47 மணிக்கு மதுரையை வந்த டைந்தது. சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்த (தனியார் பார்ட்டி கோச்) ரயில் பெட்டி மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு மதுரை ரயில்வே சந்திப்பிலிருந்து 800 மீட்டர் தெற்கே உள்ள போடிநாயக்கனூர் தண்டவாளத்தில் ஸ்டேபிள் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் இந்தப் பெட்டி தீ விபத் துக்கு உள்ளானதாக ரயில் நிலைய அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் காலை 5.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சுமார் 1.30 மணி நேரம் போராடி காலை 7.15 மணிக்கு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சுற்றுலாப் பயணிகள் உணவு சமைப்பதற்காக ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டரை கொண்டு வந்ததும், மதுரை ரயில் நிலையத்தில் அவர் கள் தேநீர் தயாரிக்க முற்பட்டபோது சிலிண்ட ரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதும் தெரிய வந்துள்ளது. இதில்தான், 9 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். 8பேர் படுகாயம் அடைந் துள்ளனர்.
மூடப்பட்டிருந்த ரயில் பெட்டியின் கதவு
சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள். ஐந்து பேர் ஆண்கள். ஒருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தார். தீ விபத்து ஏற்பட்டபோது, ரயில் பெட்டியின் கதவு மூடப்பட்டு இருந்ததால் பலர் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனது. காயமடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், மதுரை ரயில்வே மருத்துவமனையிலும் அனுமதிக கப்பட்டுள்ளனர்.
ஆறு பேரை காணவில்லை
மேலும் இவர்களோடு பயணித்த ஆறு பேர் எங்கு சென்றுள்ளார்கள் எனத் தெரிய வில்லை. அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரயில் பெட்டியில் 55 சுற்றுலாப் பணி களும், சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்த நிறு வனத்தின் பணியாளர்கள் எட்டுப் பேரும் பயணித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் பயணத் திட்டப் படி சனிக்கிழமை மீனாட்சி அம்மன் கோவி லுக்குச் சென்றுவிட்டு ஞாயிறன்று காலை சென்னை வழியாக லக்னோ செல்லத் திட்ட மிட்டிருந்தனர்.
அடையாளம் காணப்பட்ட உடல் விவரங்கள்
1) பரமேஸ்வர் குமார் குப்தா (55) ஆண், 2) மித்லேஸ் குமாரி (62) பெண், 3) சந்திர மன் சிங் (65) ஆண் (சந்தேகிக்கப்படுகிறது). 4) ஹேமானி பன்ஷால் (22) பெண், 5) சாந்தி தேவி வர்மா (57) பெண், 6) அங்குர்கஷ்யம் (36) ஆண், 7) மனோரமா அகர்வால் (82) பெண் உட்பட 4 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் இருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை.
பெட்டியைத் திறக்கும் சாவி இல்லை
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் கூறுகையில், பெட்டியின் கதவுகள் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததால். விபத்தில் சுற்றுலாப் பயணிகளும் மற்ற வர்களும் உள்ளே சிக்கிக்கொண்ட னர். “சாவி யாரிடம் உள்ளது என்று யாருக்கும் தெரியாததால், பயணி களை தப்பிக்க செய்ய பூட்டை உடைக்க வேண்டியதாயிற்று” என்றார். விபத்திலிருந்து தப்பிய அயோத்தி யைச் சேர்ந்த தேவ் நாராயண் ஸ்ரீவஸ்தவா (67) கூறுகையில், பெட்டி யில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். பலர் தூங்கி விழித்திருந்தனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் வெளியே வர முயன்றனர். கதவுகள் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தன, பூட்டை உடைக்க ஒரு குறடு போன்ற ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டி யிருந்தது, தீ விபத்து நிகழ்ந்த சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் கதவு உடைக்கப்பட்டது. அதன் வழியாக நான் தப்பித்தேன் என்றார். தீ அணைக்கப்பட்ட நிலையில் பிர ஷர் குக்கர்கள், பிளாஸ்டிக் டிரம்கள், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பாத்தி ரங்கள் ரயில்பெட்டிக்கு வெளியே சித றிக்கிடந்தன.
சவாலாக அமைந்த தீயணைப்பு
தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகை யில், “ஸ்டேபிள் லைனின் இருபுறமும் உயரமான சுவர்கள் இருந்தன. இத னால் தீயை அணைப்பது பெரும் சவா லாக இருந்தது என்றார். விபத்து குறித்து அறிந்த அமைச்சர் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாக ராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணை யர் பிரவீன்குமார், தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஆர்.என்.சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் (டி.ஆர்.எம்.), பி.ஆனந்த் மற்றும் அதிகாரி கள் விரைந்து சென்று காயமடைந்த வர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் நடவ டிக்கைகளை துரிதப்படுத்தினர். மதுரை மாவட்ட வருவாய் அலு வலர் சக்திவேல் தலைமையிலான வரு வாய்த்துறை அதிகாரிகள், உயிர் பிழைத்த அனைவரையும் ரயில் நிலை யத்தில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்று உணவு மற்றும் தங்குமிட வசதி களை செய்து கொடுத்தனர்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடுத் தொகை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை ரயில் நிலை யத்துக்குள்ளும், ரயிலிலும் எடுத்துச் செல்லக் கூடாது என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. விபத்திற்குள்ளான பெட்டி 800 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டதால் ரயில் சேவையில் எந்தத் தடையும் இல்லை. வழக்கம்போல் ரயில்கள் வந்து சென்றன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த விப ரங்களை அறிந்து கொள்ள இரண்டு உதவி எண்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது:- 9360552608, 8015681915. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந் தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித் துள்ளதோடு, உயிரிழந்தவர்களுக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளு நர் ஆர்.என்.ரவி ஆகியோர் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரி வித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், துணைமேயர் தி. நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பி.ஜீவா, பி. கோபிநாத் ஆகி யோர் அரசு ராஜாஜி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பயணி களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். சதிவேலை இல்லை: ஏடிஜிபி ரயில்வே போலீசார் சார்பில் தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குநர் வனிதா விபத்து குறித்து நேரில் விசா ரணை மேற்கொண்டார் . பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுப்பு எரிப்ப தற்கான விறகு, கரி உள்ளிட்டவை ரயில் பெட்டியில் இருந்தன. மதுரை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தவில்லை. பயணிகளை அனுப்பி வைத்த டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டு, விமானம் மூலம் உத்தரப்பிர தேசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார். இன்று விசாரணை ரயில் பெட்டியில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சௌத்ரி இன்று (ஞாயிறு) மதுரை யில் பொது விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணை காலை 9.30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலு வலக வளாகத்தில் உள்ள கோட்ட மேலாளர் மாநாட்டு அரங்கில் நடை பெறும்.