கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தலைமையில் ‘‘நம்ம ஊரு சூப்பரு’’ திட்டத்தின் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.