tamilnadu

img

மறைக்கப்பட்ட கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நூல் - செ. தமிழ் ராஜ்

காலம் ஒருவரின் புகழை குழிதோண்டி புதைத்தாலும், மறதிக் கறையான்களால் செல்லரித்து செரித்தாலும், பீனிக்ஸ் பறவையாய் கிளர்ந்து எழுப்ப எவரேனும் நெருப்பை  பற்ற வைத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் திரைப்படத் துறையில் இருட்டடிப்பு செய்யப்பட்ட கலைஞர்களை தோண்டி  எடுத்து, நதி மூலம் ரிஷி மூலம் பார்த்து, உண்மையான மூலவர்களை கண்டறிந்து, போலியான உற்சவர் களின் முகமூடிகளை கழற்றி எறிந்தி ருக்கிறார். பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் கவிஞருமான ப.கவிதா குமார் அவர்கள் . மதுரை புத்தகக் கண்காட்சியில் உயிர்மையின் வெளியீடாக வந்துள்ள ‘இன்று இப்படம் கடைசி, நூலானது வாசிப்பு சுவாரசியமும் தகவல்களின் சுரங்கமாக திகழ்கிறது. அதற்கான உழைப்பு என்பது நம்மை அச ரடிக்கிறது. உண்மையை தேடி பயணி ப்பதும் பொய்மைகளின் தோலுரிப்ப தும் சமூகக் கடமையன்றி வேறென்ன? திரைப்படமும் சினிமா சார்ந்த செய்திகளும் ரசிகர்களுக்கு எப்பொ ழுதுமே உவப்பானவை. வாசிக்க வாசிக்க அலுப்பு தட்டாதவை ஒரு துண்டுதுக்கடா படங்களில் ஒரிரு காட்சி களில் வந்து சென்றவர்கள் கூட உலகெ லாம் அறிந்தவர்களாக மாறிவிடு கிறார்கள். ஆகவே அவர்களின் ஒவ்வொரு செய்தியும் கிசுகிசுகளாக மாறி ரசிகமனங்களில் ஒரு வித போதை யேறி விடுகிறது.

14 ஆவது கட்டுரையான இருட்டடிப்பு செய்யப்பட்ட எம்ஜிஆர் படத்தின் இசையமைப்பாளர் என்.எஸ். பாலகிருஷ்ணன் அவர்களை பற்றிய கண் கலங்க வைக்கும் தகவல்களை நம்முன் ஆதாரத்துடன் அடுக்குகிறார். சம்மதமா/சம்மதமா/நான் உங்கள் /கூடவர சம்மதமா/சரிசமமாக/நிழல் போல/ நான் கூடவர சம்மதமா என்ற பாடலும்     அடுத்ததாக பாடுபட்டா/தன்னாலே/பலனிருக்குது/கை மேலே/தேடி வராது/முன்னாலே திரும்பி பாரு/பின்னாலே என்ற பாடலும் மிகப் பிரபலமான இப்பாடல்களை எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் பெயரால் தான் இன்று வரை நாம் அறிகிறோம் கலைஞனுக்கு இழைத்த  அநீதி காலம் காலமாக தொடரக் கூடாது என்று உண்மையான இசைஞன் என்.எஸ்.பாலகிருஷ்ணன் தான் என்று ஆதாரத்தோடு முன் வைக்கிறார் 26 ஆவது கட்டுரையான அந்தக் காலத்து பிரபுதேவா எனும் தலைப்பில் கள்ளபார்ட் நடராஜன் குறித்த சுவை யான தகவல்கள். 1959இல் உருவான ஒரு பாடல் இன்று கூட துள்ளலிசை பாடல்களில் மிகச் சிறப்பான இடத்தை பிடித்து நிற்கின்றது என்றால் அது மிகையான சொல் அல்ல இன்றும் கூட எங்கேயாவது அப்பாடல் ஒலித்தால் தன்னையறிமால் கால்கள் தாளமிடத் துவங்கி விடும் இதோ அந்த பாடல் சித்தாடை கட்டிக்கிட்டு/சிங்காரம் பண்ணிகிட்டு/மத்தாப்பு சுந்தரி ஒருத்தி/மயிலாக வந்தாளாம் சுமார் 6.07 நிமிடங்கள் ஒலிக்கும் இப்பாடலின் இசைக்கும் வரிக்கும் நட னத்திற்கும் மயங்காதோர் எவருண்டு. பாடலை எழுதியவர் மருதகாசி பாடி யோர் எஸ்.சி. கிருஷ்ணன் சுசீலா. இதே மாதிரி இன்னொரு துள்ள லிசைப் பாடல் குமுதம் படத்திலும் இடம்  பெற்றது கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்திரராஜன் ஜமுனாராணி பாடிய மாமா மாமா மாமா/ஏம்மா ஏம்மா ஏம்மா

சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா தாலி கட்டும் முன்னே/மேலே வந்து விழலாமா என்ற அருமையான பாடலுக்கும் ஆடி அந்தக்கால பிரபுதேவாவான கள்ள பார்ட் நடராஜனை இன்றைய தலைமுறையினர் தெரிந்தி ருக்க வாய்ப்பில்லை. புதிய தலைமுறை யினரும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு  தருகிறார். தேவர் மகன் திரைப்படத் தில் நடிகை ரேவதிக்கு அப்பாவாக நடித்திருப்பாரே அவர் தான் அக்கால நட னப்புயல் கள்ளபார்ட் நடராஜன் எனும் தகவல் மிகப் புதிதாக இருக்கிறது பெண்களை இருட்டடிப்பு செய்வது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றாலும் சினிமாத் துறையில் அது இன்னும் மிக மோசமாக இன்றுங் கூட பெண்களின் வெற்றியை சுற்றி திரையிடுகிறார்கள். அந்தக் காலத்தில் அது எவ்வளவு குரூரமாக இந்திருக்கும் என்பதை தியாகராஜருக்கு டஃப் கொடுத்த பாடகி எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மதுரையில் சிந்தாமணி எனும் ஒரு திரையரங்கம் இருந்ததும் அது இன்று இடிக்கப்பட்டு ராஜ்மஹால் எனும் ஜவுளிக்கடையாக மாற்றப்பட்டு இருப்பது மதுரைக் காரர்கள் யாவர்க்கும் தெரியும். அந்த சிந்தாமணி என்ற திரையரங்கிற்கு சிந்தா மணி எனும் திரைப்படமும் அதில் நடித்த தியாகராஜ பாகவதரும் மட்டுமே இதுவரை கதையாக சொல்லப்பட்டு வந்திருக்க அந்த படத்தின் கதாநாயகி கே. அஸ்வத்தம்மாவை பற்றி யாருக்கும் தெரியாது. கன்னட நடிகை யும் பாடகியுமான அஸ்வத் தம்மா அவர்களும் சிந்தாமணி படத்தின் வெற்றிக்கு  பெருங்காரணமாக இருந்துள் ளார்கள் என்பது இப் புத்தகத்தை படித்த பின்புதான் தெரிகிறது. சிந்தாமணி என்ற கதாபாத்திரமும் கதையும் அஸ்வத்தம்மாவை முன்னிறுத்தியே பின்னப்பட்டதும் பெயர்ப் பட்டிய லில்  அஸ்வத்தம்மாவே முதலில் வரு கிறார்கள். அடுத்த பெயராகத்தான் தியாகராஜ பாகவதரை போடுகிறார்கள் என்பதும் புதுச்செய்தி.

கடைசிக் கட்டுரையான பாரதி ராஜா அறிமுகப்படுத்திய பாடகி தேனி  குஞ்சரத்தம்மாளை பற்றிய தகவ லோடு நிறைவு செய்திருக்கிறார். காதலன் படத்தில்  பேட்ட ராப் பாடலும் முத்து படத்தில் கொக்கு சைவ கொக்கு பாடலும் இன்றைய ரசிகர்களால் மறக்க முடியாத பாடல்களாகும். ஏன் இப்படி செஞ்சீங்க ஜாக்சன் துரை கட்டுரை கண்ணீர் வர வைக்கக் கூடியது. நடிகை நதியாவிற்கு இவர் தான் முன்னோடி. தமிழ் கிறிஸ்தவ இசையின் நைட்டிங்கேல். என 31 சுவாரசியமான கட்டுரைகள் வாசிக்க வாசிக்க திகட்டாதது. தகவல்களை தேடிச் சேகரித்து ரசிகர்களுக்கு கொடுத்த ப.கவிதா குமார் அவர் களுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தகவலெனும் சொற்களின் சுரங்கப் பணி. எல்லாத் தளத்திலும் புதை ந்து கிடப்போரை மீட்டெடுத்து தருக.!

இன்று இப்படம் கடைசி
ஆசிரியர் : ப.கவிதா குமார்
பக்கம் 189 / விலை 250
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
ஆண்டு 2024