tamilnadu

img

53 ஆண்டு பழமையான மின் இறைவை பாசன திட்டம்

தஞ்சாவூர், பிப்.22-  ஒரத்தநாடு அருகே 53 ஆண்டுகள் பழமையான இறைவை பாசனத் திட்டத்தை, புதுப்பித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி, 5 ஊராட்சி மன்றத் தலைவர்கள் முதல்வரிடம் புதன்கிழமை மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் வடு வூர் ஏரியில் இருந்து கண் ணாறு உருவாகிறது. இந்த ஆறு சுமார் 34 கி.மீ தூரம் பய ணித்து புளியக்குடி கிராமத்தில் பாமினி ஆற்றில் இணை கிறது. கண்ணாற்றின் குறுக்கே  ஆறு படுக்கை அணைகளின் மூலம் 8,241 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் படுக்கை பகுதியில், முன்னாள் முதல் வர் கருணாநிதியால், மின் இறைவை திட்டம் ஏற்படுத்தப் பட்டு, கடந்த 1969-ஆம் ஆண்டு, செப்.17 ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஒரத்தநாடு வழியாக திருச்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஒக்கநாடு கீழையூர் பஞ்சா யத்து தலைவர் சுரேஷ் தலை மையில், பாசன வசதி பெறும் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சா யத்து தலைவர்கள், விவசாயி கள் ஆகியோர் இணைந்து மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், சிபிஎம் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், விவசாயிகள் சார்பில் வைர மணி ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு அளித்தனர்.  அந்த மனுவில், ‘‘ஆறுகள், ஏரிகள், வரத்து மற் றும் வடிகால் வாரி தூர்வார வேண்டும். பழுது நீக்கம் செய்ய வேண்டும். எதிர்பாராத பருவம் தவறி பெய்த கனமழை யால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் அனைவருக்கும் கடந்த ஆண்டு போல் ஏமாற் றம் அடையாமல் உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். அம்மாபேட்டை பகுதி விவசாயிகளின் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.