இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9ஆம் வகுப்பு மாணவி அதிமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்காமல், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று பரமக்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.