tamilnadu

img

12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்த 70 ஆயிரம் ஆசிரியர்கள்

சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு  தேர்வு முடிவடைந்த நிலையில் அனைத்து பாடங்களின் விடைத்தாள் களும் பாதுகாப்பாக மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள்கள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்வதை தடுக்கும் வகையில் காவல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 80 ஆயிரம் மையங்கள் மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் வருகிற 10 ஆம் தேதி  முதல் திருத்தப்படுகின்றன. இதற்காக  தமிழ்நாடு முழுவதும் 80 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், தவறுகள்  ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. கூட்டல் தவறும், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட பிழைகள் ஏற்படாதவாறு பணியினை மேற்கொள்ள வேண்டும்  என கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரி யர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போனுக்கு தடை! விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சிய போக்கு வேண்டாம் எனவும்  மையங்களில் செல்போன் பயன் படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தம் செய்த ஆசிரியர்களில் சிலரின் கவனக் குறைவின் காரணமாக மாணவர்க ளுக்கு மதிப்பெண் குறைவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் சூழலும்  உருவாகிறது. தவறு செய்யும் ஆசிரியர்கள் நடவடிக்கைக்கு ஆளாகிறார்கள். இந்த போக்கு தொடரக்கூடாது என்பதில் கல்வித்துறை உறுதியாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் மதிப்பெண் பதிவேற்ற