திருவண்ணாமலை,அக்.24- செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், புதுச்சேரியிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக் குள்ளானதில் 5பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் மேலும் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட 6 பேர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரி ழந்தனர். எஞ்சிய 4 பேரை மேல்சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து, செங்கம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன், மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், வேலூர் சரக டிஐஜி சின்னசாமி ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு வந்து பார்வை யிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ திருவண்ணா மலை மாவட்ட எல்லையான வெள்ளகுட்டை முதல் பென்னாத் தூர் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்ட ருக்கு ஒரு இடத்தில் தடுப்புகள் அமைத்து அதிவேகத்தை கட்டுபடுத்தப்படும்” என்றனர்.
இந்த கோர விபத்து குறித்து மேல்செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஓசூர் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தை சேர்ந்த வர்கள் என்பதும் தொடர் விடு முறை என்பதால் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று மீண்டும் ஓசூர் திரும்பும்போது இந்த கோர விபத்து நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் கார் ஓட்டுநர் ஊத்தங் கரை அடுத்த மாரண்பட்டி சேர்ந்த காமராஜ் என்பதும், இவருடன் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த வர்கள் என்றும் மீதி 8 பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தற்போது தெரியவந் துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் 7 பேர் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். இந்த கோர விபத்து நடந்த சுவடு மறை வதற்குள், மீண்டும் 7 பேர் பலி யாகி உள்ள சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.