tamilnadu

img

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 65 சதவிகித வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல், புதனன்று (பிப். 5) காலை 7 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. இதில், மாலை 5 மணி வரை சுமார் 64.02 சத விகித வாக்குகள் பதிவாகின.  திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  மா.கி. சீதாலட்சுமி, 31 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட  மொத்தம் 46 போ் வேட்புமனு செய்திருந்தனர். கடந்த 10  நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த பிரச்சாரம் பிப்ரவரி  3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புதனன்று (பிப்.5) அன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. ஈரோடு கிழக்குத் தொகுதியில், 1 லட்சத்து 09 ஆயிரத்து  636 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண்  வாக்காளர்கள், 37 மாற்றுப் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், இவர்களுக்காக 53 வாக்குப்பதிவு  மையங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந் தன.

ஒன்பது வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறி விக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, அதிகாலையிலேயே குவிந்த வாக்காளர்கள், வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தினர். இதனால், காலை 11 மணிக்கே சுமார் 20 சதவிகித வாக்கு கள் பதிவாகின. இந்நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி, 64.02 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.