திருச்சிராப்பள்ளி, ஜன.16 - திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற் கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி திரு வெறும்பூர் சூரியூரில் திங்களன்று நடை பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, தஞ்சா வூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 610 காளை களும், 314 வீரர்களும் கலந்து கொண்டனர். ஏடிஎஸ்பி தலைமையில், 3 டிஎஸ்பி, 12 ஆய்வாளர்கள் மற்றும் காவ லர்கள் என 330 போலீசார் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சுஜித்குமார் தலைமையில் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். இறுதியாக, 17 காளைகளை அடக்கிய பெரிய சூரியூரைச் சேர்ந்த பூபாலன் முதல் பரிசாக இருசக்கர வாக னத்தை பெற்றார்.
14 காளைகளை அடக்கிய ரஞ்சித் இரண்டாம் பரிசை வென்றார். போட்டியாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார். பார்வையாளர் பலி இப்போட்டியின் போது காளை முட்டியதில், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் கண்ணக்கோல்பட்டியைச் சேர்ந்த அரவிந்த்(25) என்ற இளை ஞரின் மார்பு பகுதியில் படுகாய மடைந்து, திருச்சி அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியில் 62 பேர் காயடைந்தனர். படுகாயமடைந்த 11 பேர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.