சென்னை, செப். 27- அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50,000 பேர் தேர்ந்தெடுக் கப்பட உள்ளனர் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப் படும் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (செப்.27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பணி நியமன ஆணை களை வழங்கினார். அப்போது பேசிய அவர், “அரசாங்க வேலைக்கான மவுசு எந்தக் காலத்திலும் குறையாது. போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று எப்படியாவது அரசுப் பணி வாங்க வேண்டும் என்பது படித்த இளைஞர்களின் பெரும் கனவு. அந்த வகையில் இங்கு வந்துள்ள உங்கள் லட்சியக் கனவு நிறைவேறியுள்ளது. அதன் அடை யாளம் தான் உங்கள் கையில் உள்ள பணி நியமன ஆணை” என்றார்.
ஒருவருக்கு வேலை கிடைக்கு மேயானால் ஒட்டுமொத்த குடும்பமும் பயன்பெறும். பல தலைமுறைக்கும் பலனளிக்கும். நீங்கள் லட்சத்தில் ஒருவராக தேர்வாகி உள்ளீர்கள். அப்படி லட்சத்தில் ஒருவராக தேர்வான உங்கள் ஒவ்வொருவரின் இலக்கும் மக்கள் சேவையாக மட்டுமே இருக்க வேண்டும். மக்களுக்காக மக்களால் நடத்தப் படுவதே மக்களாட்சி. அந்த வகை யில் அரசாங்கம் தீட்டும் எல்லாத் திட்டங்களும் மக்களின் நன்மைக் காக தான் என்றும் முதலமைச்சர் கூறினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்ப தன் மூலம், அவர்களது குடும்பங் களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவ தோடு அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும், உற்சாகத் தையும் நிச்சயம் அளிக்கும். அரசுத் திட்டங்கள் பாரபட்ச மில்லாமல் எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த அரசு சமூக நீதி காக்கும், மக்கள் நலன் பேண க்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், 12,576 பேருக்கு அரசு பணி வழங்கப்பட் டுள்ளது. தற்போது 10,205 நபர்களுக்கு அரசு பணி வழங்கப்ப ட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நடப்பாண்டில், மேலும் 17,000 பேருக்கு பல்வேறு அரசுப்பணி கள் வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.