மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன் றான மாலி நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தங்கச் சுரங் கத்தில் சனிக்கிழமை (பிப். 15) அன்று இரவு ஏற் பட்ட சரிவு விபத்தில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறி வித்துள்ளது. விபத்தின்போது, 1,800 பேர் சுரங்கத்தினுள் இருந்ததாகக் கூறப் படுகிறது. இந்த விபத்தில் பெரும்பாலா னோர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என செய்தி கள் வெளியாகியுள்ளன. ஒரே மாதத்தில் இது இரண்டாவது சுரங்க விபத்து ஆகும். கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த சரிவு விபத்தில் 70-க்கும் அதிகமானோர் பலி யாகினர். மாலி நாட்டின் மக்கள்தொகை யில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமா னோர் வருமானத்துக்காக சுரங்கத் துறை யை நம்பியுள்ளனர்.