வணக்கம் நண்பர்களே. பொதுவாகவே, ஓர் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் என்பவை, விண்வெளியை நாம் ஆராய உகந்த மாதங்கள் எனலாம். ஏனெ னில், இம்மாதங்களில் மழை அவ்வளவாக இருக்காது. எனவே வானை ஆராய, வானில் வலம் வரும் கோள்களைக் காண சிறப்பான மாதங்கள் என்று கருதப்படுகின்றன. இந்த ஆண்டு உள்ள கூடுதல் சிறப்பு என்பது சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கோள்களையும் ஜனவரி மாதம் பார்க்கலாம் என்பதுதான்.
ஜனவரி 2025 இல் தெரியும் கோள்கள்
2025 ஆம் ஆண்டு, ஜனவரி துவக்கத்தில் இருந்தே இவை தெரிகின்றன. ஆனால் சூரிய மண்டலத்தில் உள்ள வரிசையில் அல்ல. சூரிய மண்டலத்தில், சூரியனுக்கு அடுத்து, புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்பவை. ஆனால் நாம் இந்த ஜனவரி மாதம், சூரியன் மறைந்த பின்னர் காண்பது அந்த வரிசையில் அல்ல. சூரியன் மறைந்த பின்னர் மேற்கு வானில், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே வெள்ளி பளீரென, கார்த்திகை விளக்குபோல ஒளி வீசிக்கொண்டு சுமார் 45 டிகிரி உயரத்தி லிருந்து வலம் வருகிறது, இதனை நாம், இரவு 9 மணி வரை பார்க்கலாம். பின்னர் அது மறைந்து விடும். இந்த ஜனவரி மாதம், வெள்ளி தவிர மேலும் 3 கோள்கள், அதாவது சனி, வியாழன் மற்றும் செவ்வாய் கோள்கள் தெரிகின்றன. எனவே நமது சாதாரண கண்ணால் இந்த நான்கு கோள் களான வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் - இவை இந்த வரிசையிலேயே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வரிசையாகத் தோன்றும். அவற்றை நாம் பார்க்கலாம்.
எப்போது எப்படி பார்க்க...?
இவை அனைத்தும் சூரியன் மறைந்த பின்னர், இருட்டிய பிறகு முதல் ஒரு மணி/2 மணி நேரங்களில், அதாவது இரவு 6-7.30 மணிக்குள் நாம் எவ்வித கருவியின் உதவியும் இன்றி வெறும் கண்ணால் பார்க்கும் அள வுக்கு பிரகாசமாக இருக்கும் என நாசா தெரி வித்துள்ளது. மேலும் நீங்கள் GOOGLE இணைய தளத்தில் போய் SKY&TELESCOPE என்று போட்டால், எந்தெந்த தேதியில் இரவு வானில் என்னென்ன கோள்களைப் பார்க்கலாம் என்று காட்டும். அதிலும் குறிப்பாக, அதிலேயே வரும் This week’s sky at a Glance பகுதியை சொடுக்கினால், ஒவ்வொரு வாரமும், எந்த தேதியில் என்னென்ன கோள்கள், என்னென்ன விண்மீன்கள், எந்தப் பக்கம் என்ன உயரத்தில், எந்த திசையில் என்றும்கூட தெளிவாகப் போட்டி ருக்கும். இந்த நேரத்தில் வானில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களும்கூட இருக்கும். ஆனால் அவற்றைப் பார்க்க ஆற்றல் மிகுந்த இருகண் நோக்கிகள் (Binoculars) அல்லது தொலைநோக்கிகள் தேவைப்படும். Starwalk.space-படி, ஜன.21 மாலையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வீனஸ் மற்றும் சனி ஆகியவை வானத்தில் வலம் வரத் துவங்குகின்றன. இந்த ஆறு கோள் களில், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகியவை வெறும் கண்களால் தெரியும். நெப்டியூன் மற்றும் யுரேனஸைப் பார்க்க, உங்க ளுக்கு அதிக ஆற்றல் கொண்ட தொலை நோக்கி வேண்டும். மேலும் எல்லா கோள்களும் நகர்ந்து கொண்டே இருப்பதால், தொலை நோக்கியை அதற்குத் தகுந்தாற்போல நகர்த்தி, நகர்த்தி சரிசெய்து பார்க்க வேண்டும். ஜனவரி மாதம், 2025 ஆம் ஆண்டில் இப்படி இரவு வானில் வலம் வந்து செல்வதை, நாம் “அழகான கோள்களின் அற்புத அணிவகுப்பு” என்று கூறுகிறோம். ஒரு சிறப்பான குறிப்பிடத் தக்க வான் நிகழ்வு ஆகும் இது. சூரிய மண்ட லத்தின் ஆறு கோள்களான வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை இரவு வானத்தில் நெருக்கமாக இணைகின்றன.
கோள்களின் அணிவகுப்பை நாம் எப்படி காண்பது?
கோள்களின் அணிவகுப்பை கண்டு மகிழும் செயல்பாடு மிகவும் எளிதுதான். சூரியன் மறைந்த பின்னர் மேற்குத் திசை யைப் பாருங்கள், கொஞ்சம் தென்மேற்கு வானில் பளீரென ஒரு வெளிச்சப் புள்ளி தெரி யும், அதுதான் பூமிக்கோளுக்கு முன்னால் உள்ள சூரிய மண்டலத்தின் இரண்டாவது கோளான வெள்ளி. கொஞ்ச நேரத்தில் அது பளீ ரென கார்த்திகை விளக்கு போல மிகவும் பிர காசமாக ஒளிவீசும். அதன்பின் ஓர் அரைமணி நேரம் கழித்து, அதற்கு மேலே ஒரு முழங்கை அளவு தொலைவில் சின்ன நீலப்புள்ளியாக சனிக்கோள் தெரியும். போகப் போக கொஞ்சம் வெளிச்சம் கூடும். ஒருக்கால் உங்களால் அதனை அடையாளம் காண முடியாவிட்டால், உங்கள் கைப்பேசியால் ஒரு படம் எடுக்கவும். இப்போது வெள்ளிக்கோளும் அதன் கீழே சனியும் தெரியும், குதூகலப்படுங்கள்... வெள்ளி, சனி என இரு கோள்களைப் பார்த்ததிற்கு.
கிழக்கே வியாழனும் செவ்வாயும்
அப்படியே கிழக்கு நோக்கி திரும்புங்கள், உச்சி வானுக்கு அருகில், கொஞ்சம் வட கிழக்கில், பளீரென வெள்ளையாய்த் தெரிவது சூரிய குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழன் கோள். இதனைத் தவிர வேறு எந்த விண்மீனும் இவ்வளவு பிரகாசமாய் இருக்காது. அதற்கு கீழே அடிவானுக்கு கொஞ்சம் மேலே, சிவப்பு புள்ளி கொஞ்சம் பிரகாசமாகத் தெரி யும். அதுதான் செவ்வாய்க்கோள்.
4 வானில் அணிவகுப்பு வரிசையாக...
என்ன நண்பர்களே! இப்போது, சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களில், 4 கோள் களைப் பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி தானே. மீதம் உள்ளவை நான்கு கோள்கள், அதில் ஒன்றான பூமியில் நின்றுகொண்டுதான் மீதமுள்ள கோள்களைப் பார்க்கிறீர்கள். சூரிய னுக்கு அடுத்துள்ள, சூரியனை விரைவில் 88 நாட்களில் சுற்றி வரும் புதன் கோளைப் பார்க்க நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். ஆமாம், அவர் இந்த மாதம் விடி காலையில் சூரியன் எழும் முன்னர் அரை மணி நேரத்துக்கு முன்னர் கிழக்கே சூரிய னுக்குப் போட்டியாக எழுந்து, நம்மை, அதாவது உலகைப் பார்த்துவிட்டு, சூரியம் உதயம் ஆன தும் அடுத்த அரை மணி நேரத்தில் மறைந்து விடுவார். யுரேனஸ், நெப்டியூன் எப்படி மீதி உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டையும் நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இவற்றைக் காண தொலைநோக்கி யும், அவைகளை அடையாளம் சொல்ல வானியலில் அனுபவம் உள்ள ஒருவரும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவை களைப் பார்க்க முடியும், அவை வியாழன், வெள்ளி கோள்களுக்கு இடையில் வலம் வருகின்றன.
மகிழுங்கள் கோள்களின் காட்சி கண்டு
எனவே நண்பர்களே, இப்போது இந்த 5 கோள்களையும் பார்த்து மகிழுங்கள். நண்பர் களுக்கும், குழந்தைகளுக்கும், அக்கம் பக்கம் வசிக்கும் நண்பர்களுக்கும் காண்பித்து மகி ழுங்கள். ஜனவரி தொடக்கத்தில் இருந்து, வெள்ளி மற்றும் சனி இரண்டும் ஒருவருக்கொருவர் நெருங்கி வருகின்றன. வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் உச்சக்கட்டம் அடையும். அப்போது இரண்டு கோள்களும் பூமியின் பார்வையில் இருந்து “இரண்டு விரல் அகல இடைவெளியில்” தோன்றும் என்று நாசா தெரிவித்துள்ளது. (உண்மையில், அவற்றுக் கிடையே நூற்றுக்கணக்கான மில்லியன் மைல்கள் உள்ளன). ஜனவரி தொடக்கத்தில் இருந்து, வீனஸ் மற்றும் சனி ஒருவருக்கொருவர் நெருங்கி வரு கின்றன. அப்போது இரண்டு கிரகங்களும் பூமியின் பார்வையில் இருந்து “இரண்டு விரல் அகல இடைவெளியில்” தோன்றும் என்று நாசா தெரிவித்துள்ளது. (உண்மையில், அவற்றுக்கி டையே நூற்றுக்கணக்கான மில்லியன் கிலோ மீட்டர்கள் உள்ளன.) செவ்வாய் ராஜாங்கம் இரவு முழுவதும் நட்புகளே உங்களுக்கு தகவல் இந்த கோள்களின் அணிவகுப்பை, ஜனவரி 21 ஆம் நாள் மட்டுமின்றி, தொடர்ந்து இந்த மாத கடைசி வரையும், பிப்ரவரி முதல் வாரம் வரையும் காண லாம். சிவப்பு கோள், செவ்வாய் பூமியி லிருந்து சூரியனுக்கு நேர் எதிரே உள்ளது மற்றும் இரவு முழுவதும் பிரகாசமாக பிரகாசிக் கிறது. ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பிர காசமான கோள்களைப் பார்ப்பது குறைவானது, பொதுவானது. ஒவ்வொரு வருடமும் இது நடக்காது.