tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாவை பைந்தமிழ் பேரவை  3 ஆம் ஆண்டு தொடக்க விழா

பாபநாசம், ஏப்.29-   பாவை பைந்தமிழ் பேரவை 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.  பாபநாசம் திருப்பாலைத் துறையில் நடந்த விழாவிற்கு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். பேரவை துணைத் தலைவர் சங்கர், ஆலோசகர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் மக்கள் நல மாண்பாளர் விருது, பாபநாசம் பெனிபிட் பண்ட் நிர்வாக இயக்குநர் ஆறுமுகத்திற்கு வழங்கப்பட்டது.  இதில் கலை பண்பாட்டுத் துறை ஓய்வு இணை இயக்குநர் குணசேகரன், குருசாமி, தில்லைநாயகி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரவை துணைச் செயலாளர் அசோக் நன்றி கூறினார்.

பூதலூரில் இன்று  நடைபெறவிருந்த  உங்களைத்தேடி உங்கள்  ஊரில் முகாம்  ஒத்திவைப்பு

தஞ்சாவூர், ஏப்.29-  மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஏப்ரல் 30 (புதன்கிழமை) அன்று பூதலூர் வட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கும் வகையில், நடைபெறுவதாக இருந்த உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் நிர்வாக காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

மே 1 தஞ்சையில்  589 ஊராட்சிகளில்  கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.29-  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தின கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறு, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே.1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணியளவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.  இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ளனர். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தின், கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று 01.05.2025 அன்று நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தினை சிறப்பித்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.