tamilnadu

img

தமிழக மீனவர்களுக்கு 3ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இராமேஸ்வரம்,அக்.28- இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப் பட்ட தமிழக மீனவர்கள் 15 பேருக்கு மூன்றாவது முறை யாக காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளங்களிலி ருந்து வைத்தியநாதன், மூர்த்தி, அஞ்சலி தேவி  ஆகியோருக்குச் சொந்த மான படகுகளில் சென்ற 15 மீனவர்களை அக்டோபர் 9 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட னர். இவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறை வடைந்ததை அடுத்து 15 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக மீனவர்கள் அனை வருக்கும் நவம்பர் 11 ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.