tamilnadu

img

மக்களுக்காக மக்களிடம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் 37  நாள் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் (ஜூன் 10-ஜூலை 17) நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிறன்று (ஜூலை 3) நடைபெற்ற நிதி வசூல் இயக்கத்தை மயிலாப்பூர் பகுதியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இது போன்ற இயக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக் குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், இரா.சிந்தன், இரா.சுதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.