tamilnadu

ஹைதியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 60 பேர் பலி

ஹைதி, டிச.15- ஹைதி நாட்டில் விபத்தில் சிக்கிய பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 60 பேர் உயிரிழந்தனர். இறந்த வர்களுக்கு அஞ்சலி செலுத் தும் வகையில் நாடு தழுவிய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவ தாக ஹைதி அரசு அறிவித் துள்ளது.  ஹைதியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கி யது. அப்போது லாரியில் இருந்து வெளியேறிய பெட் ரோலை பிடிக்க அங்கு ஏராள மான மக்கள் திரண்டனர்.  அப்போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த 20 வீடுகளும் தீப் பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். படுகா யம் அடைந்த பலரும் மருத் துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.  இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தேசிய பேரழிவு என்று ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி தெரி வித்திருக்கிறார். இறந்தவர்க ளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் நாடு தழு விய அளவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.