சென்னை,நவ.30- தமிழகத்தில் நவம்பர் 29 ஆம் தேதி வரை 26.04 லட்சம் மின் இணை ப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமி ழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தி ருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலு வலகங்களிலும் நவ.28 ஆம் தேதி முதல் டிச.31 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக் கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணைஇணைக்கும் பணியில், 2811 பிரிவு அலுவலகத்தில் நடை பெற்ற சிறப்பு முகாம்களில் 3.69 லட்சம் இணைப்புகளும், ஆன்லை னில் 3.11 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார்.