tamilnadu

img

ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டங்கள்

சென்னை, ஜன.5- தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்கள் தொடக்க விழா வெள்ளி யன்று (ஜன.5) நடைபெற் றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சுமார் ரூ.1,933.7 கோடி மதிப்பி லான 206 முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்க ளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், புதிய விளையாட்டு மைதா னங்கள், பேருந்து நிலைய மேம்பாடு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய வணிக வளாகங்கள், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், குளங்கள் புனரமைப்பு பணி கள், விரிவான பாதாள சாக்கடை திட்டங்கள், புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்ட பணி களுக்கு அடிக்கல் நாட்டி னார். மேலும் 121 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். குறிப்பாக, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன் படும் வகையில் தமிழகம் முழுவதும் 71 அறிவுசார் மையங்களையும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமை ச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, சென்னை மேயர் ஆர்.பிரியா, தலைமைச் செய லாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.