tamilnadu

img

கனமழையால் நன்னிலம் ஒன்றியத்தில் 2000 ஹெக்டேர் சம்பா பயிர்கள் சேதம்

திருவாரூர், டிச.15 - கனமழையால் நன்னிலம் ஒன்றி யத்தில் 2000 ஹெக்டேர் சம்பா பயிர்கள் சேதமாகின. வங்கக்கடலில் உருவா கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் முழுவதும் விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நன்னி லம் ஒன்றியத்தில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிபிஎம் மற் றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரில் பார்வையிட்டனர். நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள வேலங்குடி, சிறுபுலியூர், வாளூர், காளி யாக்குடி, கடகம், குருங்குளம் உள்ளிட்ட ஊராட்சி கிராமங்களைச் சார்ந்த 16 கிராமங்களில் கடந்த மூன்று  நாட்கள் பெய்த தொடர் கனமழை யால் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் 2000 ஹெக்டேருக்கு மேல் நீரில் மூழ்கி பெரும் பாதிப்படைந்துள்ளன.  மேலும் அரசனகுடி கிராமத்தில் இடியாறு கரை உடைப்பினால், ஊருக்குள் ஆற்று நீர் புகுந்து அந்தப் பகுதியில் வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தற்போது காளியாக் குடி, அன்னதானபுரம், பண்ணை நல்லூர், வாளூர், கூரத்தாழ்வார்குடி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட அரசு முகாம்களில் உள்ளனர்.  பாதிப்படைந்த இப்பகுதிகளை சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் டி.தம்புசாமி, மாநி லக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச் செல்வி, சிபிஎம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் மற்றும் நன்னிலம் ஒன்றியச் செயலா ளர் தியாகு.ரஜினிகாந்த், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.ராமமூர்த்தி, விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சரவண.சதீஷ்குமார், பொருளாளர் தங்கராசு மற்றும் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பகு திகளுக்கு நேரில் சென்று ஆய்வு  செய்தனர். முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ள கிராம மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரி வித்தனர்.