tamilnadu

img

திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் தீக்கதிருக்கு 200 ஆண்டு சந்தாக்கள்: சிறப்புப் பேரவையில் ரூ. 4 லட்சம் அளிப்பு

திருப்பூர், நவ. 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில்,  தீக்கதிர் நாளிதழுக்கான 200 ஆண்டுச் சந்தா தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபாளையம் சிட்கோ, ராக்கியாபாளையம், வீரபாண்டி ஏபி நகர் மற்றும் இடுவாய் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்களை ஒப்படைக்கும் சிறப்புப் பேரவை ஞாயிறன்று நடைபெற்றது. இதில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைகளில் சேகரிக்கப்பட்ட 200 தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ. 4 லட்சம், தீக்கதிர் ஆசிரியர்  எஸ்.பி. ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் செ.  மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பி னரும் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவருமான கே. கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் பா. லட்சுமி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.